நேற்று சென்னை.. இன்று திருச்சி.. 4 நகைக் கடைகளுக்குள் நுழைந்த அமலாக்கத் துறை அதிகாரிகள்

Subscribe to Oneindia Tamil

திருச்சி: திருச்சியில் நகைக் கடைகளில் அமலாக்கத் துறை சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

சென்னை பாரிமுனையில் என்.எஸ்.சி போஸ் சாலையில் பூக்கடை அருகில் உள்ள மோகன் லால் நகைக்கடை ஒன்றில் சோதனை செய்வதற்காக அமலாக்கத் துறையினர் சென்றனர். மொத்தம் 5 அதிகாரிகள் அந்த நகைக்கடையில் சோதனை நடத்தினர்.

ED raid at Trichy Jewel shop

இதேபோல் சென்னை பாரிமுனையில் மற்றொரு நகைக்கடையில் சோதனை செய்வதற்காக அதிகாரிகள் சென்றனர். மொத்தம் சென்னையில் 7 இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர். சென்னை சென்ட்ரல், பாரிமுனை உள்பட 7 இடங்களில் சோதனை நடத்துகின்றனர். சென்னை பாரிமுனையில் உள்ள 2 நகைக்கடையில் 10 அதிகாரிகள் இரண்டு குழுவாக பிரிந்து சோதனை நடத்தினர்.

அமலாக்கத்துறை சோதனை நடைபெறுவதை ஒட்டி அங்கு பாதுகாப்பு பணியில் சி.ஆர்.பி.எப். வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். அமலாக்கத் துறையினருடன் தமிழக போலீஸாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் திருச்சி ஜாபர்ஜா தெரு, பெரிய கடை வீதி ஆகியவற்றில் உள்ள 4 நகைக் கடைகளுக்கு 6 பேர் கொண்ட அமலாக்கத் துறை அதிகாரிகள் இன்று காலை வந்தனர். அவர்கள் 10-க்கும் மேற்பட்ட சிஆர்பிஎஃப் வீரர்களுடன் கடைக்கு வந்து சோதனை நடத்தி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+