திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் அர்ச்சகர் பயிற்சி பற்றி விஷமத்தனமான கருத்து.. அறநிலையத் துறை விளக்கம்

Subscribe to Oneindia Tamil

திருச்சி : 'அர்ச்சகர் பயிற்சிப் பள்ளி மாணவர் சேர்க்கை என்ற சொல்லை சேவை என தவறாக சித்தரித்து திருச்சி "ஸ்ரீரங்கம் கோயிலில் சேவை செய்ய இளைஞர்களுக்கு அழைப்பு" என்ற தலைப்பில் சமூக ஊடகங்களில் பரவியது விஷமத்தனமான வதந்தி என்றும், முற்றிலும் உண்மைக்கு புறம்பான செய்தி என்றும் தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறை விளக்கமளித்துள்ளது.

தமிழ்நாடு அரசின் இந்து அறநிலையத்துறை அர்ச்சகர் பள்ளிக்கான 'மாணவர் சேர்க்கை'க்கு அழைப்பு விடுதது இருந்தது. அதாவது அங்கே அவங்களுக்கு சான்றிதழ் பயிற்சி, சாப்பாடு, தங்குமிடம் கொடுத்து ஆகம விதிகளைக் கற்றுக்கொடுக்கப் போகிறார்கள். ஆனா, சமூக வலைதளங்கள்ல சில பேர் 'சேர்க்கை' என்ற வார்த்தையை மாற்றி, ஸ்ரீரங்கம் கோயிலில் குழந்தையை சேவை செய்ய (வேலை செய்ய) கூப்பிடுறாங்க' அப்படின்னு பரப்பிவிட்டார்கள். அரசுக்கே சட்ட ரீதியான நெருக்கடி வரும் வகையில் வதந்தி பரவியது.

HR amp amp CE Slams Fake Rumours Over Trichy Srirangam Temple Priest Training School Admission

பொதுவாகவே, இந்து சமய அறநிலையத்துறை மற்றும் தமிழக அரசு மீது சமூக வலைதளங்களில் ஒருதரப்பினர் எப்போதும் தீவிரமான விமர்சனங்களை வைப்பது வழக்கம். இந்தச் சூழலில், "குழந்தைகளை வச்சு கோயில்ல வேலை வாங்குறாங்க" என்ற பொய் செய்தி பரவினால், அது துறையின் பெயரைக் கெடுத்து, பக்தர்களிடையேயும் பொதுமக்கள் மத்தியிலும் அரசுக்கு எதிரான மிகப்பெரிய அதிருப்தியை உருவாக்கிவிடும். அதனால்தான், தங்களுக்குக் களங்கம் விளைவிக்க வேண்டும் என்றே பரப்பப்பட்ட "விஷமத்தனமான பொய் செய்தி" என்று அறநிலையத்துறை அழுத்தமாக விளக்கம் அளித்துள்ளது.

இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்ட அறிக்கையில், 'ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் நடத்தப்படும் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளிக்கு (வைணவம்-பாஞ்சராத்ர ஆகமம்) 2026-2027 ஆண்டுக்கான ஓராண்டு இளநிலை வைணவ அர்ச்சகர் சான்றிதழ் பயிற்சியில் சேர 14 வயது நிரம்பிய குழந்தைகளில் விரும்புபவர்கள் உரிய படிவத்தில் விண்ணப்பிக்கும்படி கடந்த 24.05.2026 அன்று தினத்தந்தி நாளிதழில் விளம்பரமும் இதுதொடர்பாக 06.06.2026 திருச்சி சூரியன் எப்.எம் வானொலியிலும், 08.06.2026 திருச்சி ஹலோ எப்.எம் வானொலியிலும், ஒலிபரப்பு விளம்பரமும் செய்யப்பட்டது.

மேற்படி அறிவிப்புகளில் விண்ணப்பம் அளிப்பதற்கு கடைசி நாள் 08.06.2026 என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் 10 விண்ணப்பங்கள் மட்டுமே வரபெற்றது. ஆதலால் மாணவர் சேர்க்கையினை அதிகப்படுத்துவதற்கு மேற்படி விண்ணப்பத்திற்கான கடைசி நாள் 30.06.2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என 11.06.2026 அன்று அனைத்து நாளிதழிகளிலும் செய்தி வெளியிட கேட்டுக்கொள்ளப்பட்டது.

மேற்படி அர்ச்சகர் பயிற்சிப் பள்ளி மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பில் இடம்பெற்றிருந்த சேர்க்கை என்ற சொல்லை சேவை என தவறாக சித்தரித்து "ஸ்ரீரங்கம் கோயிலில் சேவை செய்ய இளைஞர்களுக்கு அழைப்பு" என்ற தலைப்பில் சமூக ஊடகங்களில் தன்னிச்சையாக அறிவிப்பு ஒன்று தனிநபர்களால் பதிவிடப்பட்டு குழந்தைகளை சேவை செய்ய திருவரங்கம் திருக்கோயில் நிர்வாகம் அழைப்பதாக விஷமத்தனமாக கருத்து பரப்பப்பட்டுள்ளது.

இது முற்றிலும் உண்மைக்கு புறம்பான செய்தியாகும். இது திருக்கோயிலுக்கும், இந்து சமய அறநிலையத்துறைக்கும், அரசுக்கும் களங்கம் ஏற்படுத்தும் விதமாக தவறாக வெளியிடப்பட்டுள்ள பொய் செய்தி என்ற விபரம் பக்தர்களுக்கும் பொதுமக்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+