Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அப்பா கூப்பிட்டார்.. உடனே வந்துட்டேன்.. சொன்னா பிரச்சாரமும் செய்வேன்.. விஜய பிரபாகரன்

விஜயகாந்த் சொன்னால் பிரச்சாரம் செய்வதாக விஜயபிரபாகரன் கூறியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    அப்பா விஜயகாந்துக்காக பிரச்சாரம் செய்ய வந்த மகன்-வீடியோ

    திருச்சி: "அப்பா சொன்னால் கண்டிப்பாக தேர்தல் பிரச்சாரம் செய்வேன்" என்று விஜயகாந்தின் மூத்த மகன் விஜயபிரபாகரன் தெரிவித்துள்ளார்.

    விஜயகாந்த் உடல்நிலைக்கு பிறகு அவரது மகன் விஜய பிரபாகரன் அரசியலில் ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் விஜயகாந்தின் உடல் நிலை குறித்து பல்வேறு வதந்திகள் எழுந்தபோதுகூட பேஸ்புக்கில் அவரது நேரலை செய்தி கட்சி தொண்டர்களை மட்டும் அல்லாமல் பலரையும் ஈர்த்தது.

    கட்சி சார்பில் நடக்கும் விழாக்களில் கலந்து கொண்டு வருவதுடன், தேமுதிகவை வளர்த்தெடுக்க இளைஞர்களுக்கு அறைகூவல் விடுத்து வருகிறார். இந்நிலையில், திருச்சி மாவட்டம், மணப்பாறையில் தேமுதிக கொடியேற்று விழா மற்றும் கட்சி பிரமுகர் இல்ல திருமண விழாவில் விஜயபிரபாகரன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

    தேமுதிக வளர்கிறது

    தேமுதிக வளர்கிறது

    பிறகு செய்தியாளர்களிடம் பேசிய விஜயபிரபாகரன் சொன்னதாவது: "தேமுதிக தொடர்ந்து வளர்ந்து கொண்டே தான் இருக்கிறதே தவிர, இறங்கவில்லை. பதவிக்காக நான் அரசியலுக்கு வரவில்லை. சேவைக்காகவே வந்திருக்கிறேன்.

    அப்பா என்னை கூப்பிட்டார்

    அப்பா என்னை கூப்பிட்டார்

    என் அப்பா என்னை கூப்பிட்டார். நான் வந்துவிட்டேன்" என்றார். இதையடுத்து செய்தியாளர்கள், வரப்போகிற தேர்தலில் தேமுதிகவின் கூட்டணி நிலைப்பாடு குறித்து கேள்வி எழுப்பினர்.

    பிரச்சாரம் செய்வேன்

    பிரச்சாரம் செய்வேன்

    அதற்கு, "இடைத்தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் கூட்டணி குறித்து பார்த்துக் கொள்ளலாம். தேர்தல் கூட்டணி தொடர்பாக என் அப்பாவிடம்தான் நீங்கள் கேட்க வேண்டும். நான் இப்போது தான் அரசியலுக்கு வந்துள்ளேன். என் அப்பா சொன்னால் தேர்தல் பிரசாரத்திற்கு கண்டிப்பாக செல்வேன்" என்று பதிலளித்தார்.

     உற்சாக வரவேற்பு

    உற்சாக வரவேற்பு

    முன்னதாக கல்யாணத்துக்கு வந்திருந்த விஜயபிரபாகரனுக்கு, செண்டை மேளம், தப்பாட்டம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. குறிப்பாக வரவேற்பின்போது, சிறுவர்கள் ஆடிய தேவராட்டம் எல்லோரையும் வெகுவாக கவர்ந்தது. இதனையடுத்து, ரவுண்டானா அருகே கட்சி கொடியை விஜயபிரபாகரன் ஏற்றி வைத்து கல்வெட்டையும் திறந்து வைத்தார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+