தனிப்பட்டா வாங்க இவ்வளவு லஞ்சமா.. திருச்சி ஸ்ரீரங்கத்தில் நில அளவையர் சிக்கியது எப்படி?
திருச்சி: கரூர் மாவட்டம் புகளூரை சேர்ந்தவர் ராஜேந்திரன் என்பவர் கரூர் டி.என்.பி.எல். காகித ஆலையில் உதவி மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். இவர் கடந்த 3-ந்தேதி தனது மனைவி, மகன் பெயரில் புதிதாக வாங்கப்பட்ட வீட்டுமனைக்கு தனிப்பட்டா வாங்க எண்ணியிருக்கிறார். இதற்காக ஸ்ரீரங்கம் தாலுகா அலுவலகத்தில் தனிப்பட்டா வழங்கக்கோரி விண்ணப்பம் செய்ய சென்றுள்ளார். ஆனால் லஞ்சம் கேட்டார்கள். இந்த விவகாரத்தில் ரூ.9 ஆயிரம் லஞ்சம் வாங்கிய புகாரில் நில அளவையர் கையும் களவுமாக கைது செய்யப்பட்டார்.
வீட்டு மனை பத்திரப்பதிவு செய்ய, வீடு கட்ட பிளான் அப்ரூவல் வாங்க, பட்டா வாங்க, பட்டாபெயர் மாற்றம் செய்ய, தனிப்பட்டா வாங்க, வீடு கட்டும் போது நிலத்தை அளக்க, வீட்டிற்கு மின் இணைப்பு வாங்க, குடிநீர் இணைப்பு வாங்க, மின் இணைப்பு வாங்க என பல்வேறு வழிகளில் லஞ்சம் கேட்பதாக புகார்கள் உள்ளது. இந்த புகாரின் பேரில் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. லஞ்சம் கேட்கும் அரசு ஊழியர்கள் மீது புகார் அளித்தால், லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுப்பார்கள். இப்போது பலரும் புகார் அளிக்கிறார்கள். அந்த வகையில் திருச்சியில் ஒரு நில அளவையர் கைதாகி உள்ளார்.

கரூர் மாவட்டம் புகளூரை சேர்ந்தவர் ராஜேந்திரன் என்பவர் அங்குள்ள டி.என்.பி.எல். காகித ஆலையில் உதவி மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் கடந்த 3-ந்தேதி தனது மனைவி, மகன் பெயரில் புதிதாக வாங்கப்பட்ட வீட்டுமனைக்கு தனிப்பட்டா வாங்க நினைத்துள்ளார். இதற்காக அவர் ஸ்ரீரங்கம் தாலுகா அலுவலகத்தில் நில அளவை பிரிவிற்கு சென்றாராம். அங்கு தனது நிலத்தை அளவீடு செய்து தனிப்பட்டா வழங்க கோரி விண்ணப்பத்துள்ளார்.
அப்போது, அங்கு பணியில் இருந்த நில அளவையரான 34 வயதாகும் அருண் என்பவர் ரூ.24 ஆயிரம் லட்சம் கேட்டாராம். இதற்கு மறுப்பு தெரிவித்த ராஜேந்திரன், பின்னர் ரூ.9 ஆயிரம் தருவதாக ஒப்புகொண்டாராம். ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத ராஜேந்திரன் திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவிற்கு நேரில் சென்று நடந்த சம்பவங்களை கூறி புகார் அளித்தார்.
இதையடுத்து ராஜேந்திரன் நேற்று திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசாரின் ஆலோசனையின் பேரில் ரசாயன பவுடர் தடவப்பட்ட ரூ.9 ஆயிரத்தை நில அளவையர் அருணிடம் கொடுத்துள்ளார். அப்போது, அங்கு மறைந்து இருந்த திருச்சி லஞ்ச ஒழிப்பு துறை டிஎஸ்பி மணிகண்டன், இன்ஸ்பெக்டர்கள் சக்திவேல், பாலமுருகன் மற்றும் போலீசார் அதிரடியாக உள்ளே நுழைந்து அருணை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் ஸ்ரீரங்கம் தாலுகா அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications