தனிப்பட்டா வாங்க இவ்வளவு லஞ்சமா.. திருச்சி ஸ்ரீரங்கத்தில் நில அளவையர் சிக்கியது எப்படி?
திருச்சி: கரூர் மாவட்டம் புகளூரை சேர்ந்தவர் ராஜேந்திரன் என்பவர் கரூர் டி.என்.பி.எல். காகித ஆலையில் உதவி மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார். இவர் கடந்த 3-ந்தேதி தனது மனைவி, மகன் பெயரில் புதிதாக வாங்கப்பட்ட வீட்டுமனைக்கு தனிப்பட்டா வாங்க எண்ணியிருக்கிறார். இதற்காக ஸ்ரீரங்கம் தாலுகா அலுவலகத்தில் தனிப்பட்டா வழங்கக்கோரி விண்ணப்பம் செய்ய சென்றுள்ளார். ஆனால் லஞ்சம் கேட்டார்கள். இந்த விவகாரத்தில் ரூ.9 ஆயிரம் லஞ்சம் வாங்கிய புகாரில் நில அளவையர் கையும் களவுமாக கைது செய்யப்பட்டார்.
வீட்டு மனை பத்திரப்பதிவு செய்ய, வீடு கட்ட பிளான் அப்ரூவல் வாங்க, பட்டா வாங்க, பட்டாபெயர் மாற்றம் செய்ய, தனிப்பட்டா வாங்க, வீடு கட்டும் போது நிலத்தை அளக்க, வீட்டிற்கு மின் இணைப்பு வாங்க, குடிநீர் இணைப்பு வாங்க, மின் இணைப்பு வாங்க என பல்வேறு வழிகளில் லஞ்சம் கேட்பதாக புகார்கள் உள்ளது. இந்த புகாரின் பேரில் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. லஞ்சம் கேட்கும் அரசு ஊழியர்கள் மீது புகார் அளித்தால், லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்து நடவடிக்கை எடுப்பார்கள். இப்போது பலரும் புகார் அளிக்கிறார்கள். அந்த வகையில் திருச்சியில் ஒரு நில அளவையர் கைதாகி உள்ளார்.

கரூர் மாவட்டம் புகளூரை சேர்ந்தவர் ராஜேந்திரன் என்பவர் அங்குள்ள டி.என்.பி.எல். காகித ஆலையில் உதவி மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் கடந்த 3-ந்தேதி தனது மனைவி, மகன் பெயரில் புதிதாக வாங்கப்பட்ட வீட்டுமனைக்கு தனிப்பட்டா வாங்க நினைத்துள்ளார். இதற்காக அவர் ஸ்ரீரங்கம் தாலுகா அலுவலகத்தில் நில அளவை பிரிவிற்கு சென்றாராம். அங்கு தனது நிலத்தை அளவீடு செய்து தனிப்பட்டா வழங்க கோரி விண்ணப்பத்துள்ளார்.
அப்போது, அங்கு பணியில் இருந்த நில அளவையரான 34 வயதாகும் அருண் என்பவர் ரூ.24 ஆயிரம் லட்சம் கேட்டாராம். இதற்கு மறுப்பு தெரிவித்த ராஜேந்திரன், பின்னர் ரூ.9 ஆயிரம் தருவதாக ஒப்புகொண்டாராம். ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத ராஜேந்திரன் திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவிற்கு நேரில் சென்று நடந்த சம்பவங்களை கூறி புகார் அளித்தார்.
இதையடுத்து ராஜேந்திரன் நேற்று திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசாரின் ஆலோசனையின் பேரில் ரசாயன பவுடர் தடவப்பட்ட ரூ.9 ஆயிரத்தை நில அளவையர் அருணிடம் கொடுத்துள்ளார். அப்போது, அங்கு மறைந்து இருந்த திருச்சி லஞ்ச ஒழிப்பு துறை டிஎஸ்பி மணிகண்டன், இன்ஸ்பெக்டர்கள் சக்திவேல், பாலமுருகன் மற்றும் போலீசார் அதிரடியாக உள்ளே நுழைந்து அருணை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். தொடர்ந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் ஸ்ரீரங்கம் தாலுகா அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்!












Click it and Unblock the Notifications