திருச்சி மாவட்டத்திற்கு வரும் 30 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை.. காரணம் இதுதான்
திருச்சி: திருச்சி மாவட்டத்திற்கு வரும் 30 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சொர்க்கவாசல் திறப்பை முன்னிட்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறைக்கு பதிலாக வரும் ஜன.24 ஆம் தேதி வேலைநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
108 வைணவ திவ்ய தேசங்களில் முதன்மையான கோயில் என்ற பெருமைக்குரியது திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில். பன்னிரு ஆழ்வார்களால் பாடல் பெற்றதும், பூலோக வைகுண்டம் எனவும், போக மண்டபம் எனவும் போற்றப்படுகிறது.

உலகின் மிகப்பெரிய இந்து கோவில் வளாகங்களில் ஒன்றாக திருச்சி அரங்கநாதர் திருக்கோயில் விளங்கி வருகிறது. ஆண்டுதோறும் இந்த கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்கவாசல் திறப்பு உற்சாகமாக நடைபெறும். அந்த வகையில் நடப்பு ஆண்டில் வரும் 30 ஆம் தேதி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது.
இதையொட்டி அன்று ஒரு நாள் திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் வரும் ஜனவரி 24 ஆம் தேதி வேலைநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications