Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பால் விலை பேருந்து கட்டணம் உயர்கிறது..? முதலமைச்சர் தான் முடிவெடுப்பார்..அமைச்சர் கே.என்.நேரு சூசகம்

Subscribe to Oneindia Tamil

திருச்சி : அரசு அதிகாரிகள் ஊதிய உயர்வு கேட்கிறார்கள் அரசு எவ்வளவு மானியம் கொடுத்தாலும் செலவை ஈடுக்கட்ட முடியாது எனவும், பால் விலை , பேருந்து கட்டண உயர்வு குறித்து முதலமைச்சர் தான் முடிவெடுப்பார் என நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு கூறியுள்ளார்.

Recommended Video

    பால் விலை பேருந்து கட்டணம் உயர்கிறது..? முதலமைச்சர் தான் முடிவெடுப்பார்..அமைச்சர் கே.என்.நேரு சூசகம்

    திருச்சி தில்லைநகரில் உள்ள மக்கள் மன்றத்தில் 75வது சுதந்திர தின விழாவினையொட்டி நடைபெற்ற சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழா நடைபெற்றது

    இந்த நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் கலந்து கொண்டு கண்காட்சியினை திறந்து வைத்துப் பார்வையிட்டனர்.

    முதல்வர் துபாய் பயணம்

    முதல்வர் துபாய் பயணம்

    நிகழ்ச்சிக்குப் பின்னர், கே. என். நேரு செய்தியாளர்களிடம் கூறியபோது, "முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஆண்டவனுக்கு தெரிந்து தான் திருச்சிக்கு கையெழுத்திட வந்துள்ளார். முதலமைச்சர் முதலீட்டாளர்களை ஈர்க்கவே துபாய் சென்றுள்ளார். மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழ்நாடு அனைத்து வகைகளிலும் முதன்மை மாநிலம் என்பதை காட்டி, முதலீட்டாளர்களை ஈர்க்க அவர் துபாய் சென்றுள்ளார்.

    கொச்சைப்படுத்துகின்றனர்

    கொச்சைப்படுத்துகின்றனர்

    அதை எதிர்க்கட்சிகள் கொச்சைப்படுத்தி வருகின்றனர். அதிமுகவும், பாஜகவும் தான் இதை தொடர்ந்து செய்கின்றன. அவர்கள் பேசுவதற்கு வேறு பொருளே கிடைப்பதில்லை. யார் அதிகம் திமுகவை திட்டுவது? என்பதில் அதிமுகவினருக்கும், அண்ணாமலைக்கும் இடையே போட்டி நடக்கிறது. ஆனால், அரசை பொறுத்தவரை தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கான திட்டங்களை முதலமைச்சர் படிப்படியாக செய்து வருகிறார்.

    மக்கள் திமுக பக்கம்

    மக்கள் திமுக பக்கம்

    யார் என்ன பேசினாலும் மக்கள் திமுகவின் பக்கம் இருக்கிறார்கள். திமுகவின் இடத்தை பிடிக்க அவர்கள் பலவிதத்தில் பேசி கொண்டு இருக்கிறார்கள். திருச்சியில் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பது இறுதி வடிவத்திற்கு வந்துள்ளது. அதை முதலமைச்சரிடம் காட்டி ஒப்புதல் பெற்ற பின், ஒரு வார காலத்திற்குள் டெண்டர் பணிக்கு வந்து விடும். திருச்சி மாவட்டத்தில் உய்யக்கொண்டான் வாய்க்கால் சீரமைக்கும் பணி, காவிரி ஆற்றிலிருந்து நேரடியாக ஜங்ஷன் வரை நெடுஞ்சாலைத்துறை சார்பில் உயர்மட்ட பாலம் அமைப்பதற்கும் திட்ட மதிப்பு தயாரிக்கப்பட்டுள்ளது.

    பால் விலை உயர்வு?

    பால் விலை உயர்வு?

    ஒவ்வொரு பொருளும், ஒவ்வொரு காலகட்டத்திலும் பொருளாதார ரீதியாக ஏற்றம் பெறும் போது மக்கள் அதை சந்திப்பார்கள். இது வேண்டுமென்றே திணிப்பதல்ல. தனியார் பால் கொள்முதல் செய்யும் போது அவர்களுக்கு கட்டுப்படியாகாத காரணத்தால் விலையேற்றம் வேண்டும் என்கிறார்கள். அதிகாரிகள் ஊதிய உயர்வு கேட்கிறார்கள். அரசு எவ்வளவு மானியம் கொடுத்தாலும் செலவை ஈடுக்கட்ட முடியாது. இருந்தபோதும் விலையேற்றம் குறித்து முதலமைச்சர் தான் முடிவெடுப்பார்" என்றார்.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+