இது வெளிநாடு அல்ல.. தமிழ்நாடு.. அமைச்சர் வேலுமணி வெளியிட்ட 'அற்புதமான' வைரல் புகைப்படம்
Recommended Video
திருச்சி: தமிழக உள்ளாட்சி துறை அமைச்சர் கல்லணையில் இருந்து திறந்துவிடப்பட்ட நீர் அழகாக செல்லும் காட்சி என்று அருமையான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மேட்டூர் அணை தற்போது 115 அடியை தாண்டிவிட்ட நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன்பு காவிரி டெல்டா பாசனத்திற்காக 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் திருச்சி கல்லணையை வந்தடைந்த நிலையில் அண்மையில் கல்லணையும் தஞ்சை மாவட்ட பாசனத்திற்காக திறக்கப்பட்டது.
இந்த கல்லணையில் இருந்து திறக்கப்படும் நீர் காவிரி ஆற்றில் பாய்ந்து தஞ்சையை நோக்கி செல்கிறது. இது தொடர்பான புகைப்படம் ஒன்றை தமிழக உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்பி வேலுமணி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இது வெளிநாடு அல்ல நம்ம தமிழ்நாடுதான்.சீரமைக்கப்பட்ட கல்லணை கால்வாயில் திறந்துவிடப்பட்ட 1000 கன அடி நீர் அழகாக செல்லும் காட்சி. எங்கள் எளிய விவசாயி அண்ணன் எடப்பாடியாரின் நீர் மேலாண்மைக்கு சான்று! @CMOTamilNadu @OfficeOfOPS pic.twitter.com/Xru6pzsHz4
— SP Velumani (@SPVelumanicbe) August 19, 2019
கழுகுப்பார்வையில் எடுக்கப்பட்ட கல்லணையில் தண்ணீர் வெளியேறும் புகைப்படமான அது பார்ப்பதற்கு மிக அற்புதமாக காட்சி அளிக்கிறது. இந்த புகைப்படத்துக்கு மேல் "இது வெளிநாடு அல்ல நம்ம தமிழ்நாடுதான்.சீரமைக்கப்பட்ட கல்லணை கால்வாயில் திறந்துவிடப்பட்ட 1000 கன அடி நீர் அழகாக செல்லும் காட்சி. எங்கள் எளிய விவசாயி அண்ணன் எடப்பாடியாரின் நீர் மேலாண்மைக்கு சான்று!" என்று கூறியுள்ளார்.