புகார் கொடுக்க வந்த இளம்பெண்.. வாட்ஸ்அப் எண் வாங்கி ஆபாச மெசேஜ் செய்த இன்ஸ்பெக்டர்..திருச்சியில் ஷாக்
திருச்சி: செல்போனில் ஆபாச படங்களை அனுப்பி எஸ்.ஐ பாலியல் தொல்லை கொடுத்ததாக திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கல்லூரி பேராசிரியை அளித்த புகார் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்த விவரம் வருமாறு:-

திருச்சி காந்திமார்க்கெட் பகுதியை சேர்ந்த 27 வயது பெண் ஒருவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், திருச்சியில் தங்கி முதுகலை கணிதவியல் பட்டம் படித்து வருவதாகவும், தனியார் கல்லூரியில் கவுரவ விரிவுரையாளராகவும் பணியாற்றி வந்துள்ளார். மேலும் நண்பர்களுடன் சேர்ந்து நீட், ஜே.இ.இ. உள்ளிட்ட நுழைவுத்தேர்வுகளுக்கு பயிற்சி வகுப்புகளும் நடத்தி வந்துள்ளார்.
இந்த நிலையில், மார்ச் மாதம் உறவினர் ஒருவர் பாலியல் தொந்தரவு கொடுத்ததால் கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க அப்பெண் சென்று உள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் புகாருக்கு உள்ளான நபரை கைது செய்தனர். இந்த புகார் தொடர்பாக காவல் ஆணையரகம் அலுவலகம் சென்றுள்ளார்.
அப்போது மாநகர காவல் ஆய்வாளர் ஒருவர் உதவுவது போல அந்த இளம்பெண்ணிடம் பேச்சு கொடுத்தாராம். அதன்பிறகு செல்போன் எண்ணையும் வாங்கிக் கொண்டு அவருக்கு ஏப்ரல் மாதம் 25 ஆம் தேதில் வாட்ஸ் அப்பில் மெசேஜ் அனுப்ப தொடங்கியிருக்கிறார். அதிலும் ஆபாச மெசேஜ்களாக அனுப்பி பாலியல் உறவுக்கும் அழைத்ததாக சொல்லப்படுகிறது. ஆனால், இளம்பெண் மறுத்துள்ளார்.
இருந்தாலும் தொடர்ந்து முகம் சுளிக்கும் வகையிலான ஆபாச மெசேஜ்களை அனுப்பி தொந்தரவு செய்து வந்துள்ளார். இது குறித்து துணை ஆணையரை சந்தித்து புகார் கொடுக்க சென்ற போது காவல் நிலையத்தில் வைத்து ஆய்வாளர் மற்றும் சில காவலர்கள் அடித்து உதைத்து சித்ரவதை செய்தார்களாம். அது மட்டும் இன்றி செல்போனை பிடுங்கி , காவல் ஆய்வாளர் அனுப்பிய ஆபாச படங்கள் மற்றும் மெசேஜ்களை அழித்து விட்டார்களாம்.
இதனால், சம்பந்தப்பட்ட காவல் ஆய்வாளர் மற்றும் தன்னை அடுத்து அடுத்து துன்புறுத்திய காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் அளித்த புகாரில் தெரிவித்துள்ளார். காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க சென்ற இளம்பெண்ணின் எண்ணிற்கு ஆபாச படங்கள் மற்றும் மெசேஜ் அனுப்பி பாலியல் தொந்தரவு கொடுத்ததாக போலீஸ் இன்ஸ்பெக்டர் மீதே இளம் பெண் ஒருவர் குற்றச்சாட்டு முன்வைத்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications