கரோனாவை விட தினம் தினம் மக்களை வறுமை கொன்று வருகிறது: ஜோதிமணி எம்.பி
திருச்சி: தமிழக அரசு அளித்துள்ள 1000 ரூபாயில் சிலிண்டருக்கு ரூ850 போக மீதியுள்ள 150-யை வைத்து குடும்பம் நடத்த முடியுமா என்றும் கொரோனாவைவிட தினம் தினம் மக்களை வறுமை கொன்று வருகிறது என்றும் கரூர் தொகுதி காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி தெரிவித்துள்ளார்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை மற்றும் மருங்காபுரி பகுதியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட கீழையூர் காலனி மற்றும் கீரணிப்பட்டி ஆகிய பகுதிகளில் ஜோதிமணி பார்வையிட்டார். அப்போது அப்பகுதி மக்களுக்கு அரிசி, மளிகை பொருள்கள், காய்கனிகள் உள்ளிட்ட நிவாரண தொகுப்பினை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு ஜோதிமணி அளித்த பேட்டி: ஒவ்வொரு இடங்களிலும் மக்கள் பசியிலும், வறுமையிலும் வாடிவருவது மனம் வெடித்து விடுவது போல் உள்ளது. தமிழக அரசு அளித்துள்ள 1000 ரூபாயில் சிலிண்டருக்கு 850 போக மீதியுள்ள 150-யை வைத்து குடும்பம் நடத்த முடியுமா என்பது தெரியவில்லை.
பால், மருந்து வாங்க பணம் இல்லாமல் மக்கள் வறுமையுடன் வாழ்ந்து வருகின்றனர். கரோனாவை விட தினம் தினம் மக்களை வறுமை கொன்று வருகிறது. அரசு மக்களிடம் அன்பும், கருணையுடனும் இருக்க வேண்டும் என்றும், உண்மையில் மக்கள் மீதும், பொருளாதார மீட்டெடுப்பதில் அக்கறைக் கொண்ட அரசாக இருந்தால், ஏழை எளிய, விவசாய மக்களின் வங்கி கணக்கில் மாதம் ரூ7500 வீதம் மூன்று மாதத்திற்கான தொகையை செலுத்த வேண்டும்.
மாநில அரசுக்கு அளிக்க வேண்டிய நிலுவை தொகையை - ஜி.எஸ்.டி உள்ளிட்ட தொகையை கொடுக்க வேண்டும். ரூபாய் 2 லட்சம் கோடி தொகை பாக்கி உள்ளது. மோடி அரசு தொடர்ந்து தமிழகத்திற்கு துரோகம் விழைவித்து வருகிறது. மத்திய அரசு பிரதம மந்திரி நிவாரண நிதியை விட்டுவிட்டு பி.எம். கேர் தொடங்கி நூதனமான ஊழலில் ஈடுபட்டுள்ளது. கொரோ கொன்று விடுவதைவிட அரசு கொன்றுவிடும் என்ற பயம் மக்களிடம் இருந்து வருகிறது இவ்வாறு ஜோதிமணி எம்.பி. கூறினார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications