80 நாட்களுக்கு பிறகு.. திருச்சியில் இருந்து இன்று முதல் தொடங்கிய தனியார் பேருந்து போக்குவரத்து

Subscribe to Oneindia Tamil

திருச்சி: பொதுமுடக்கத்தால் நிறுத்தப்பட்டிருந்த தனியார் பேருந்துகள் திருச்சியிலிருந்து 80 நாள்களுக்குப் பிறகு மீண்டும் இன்று முதல் இயங்கத் தொடங்கியது.

மண்டலத்துக்குள் மட்டுமே பேருந்து இயக்க அனுமதிக்கப்பட்டதால் திருச்சி, திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர் ஆகிய 7 மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதிகளில் மட்டுமே இயங்கின. இதனால், பிற மண்டலங்களுக்கு செல்ல வந்த பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்ல நேரிட்டது.

Private buses ply from Trichy to their respective zones from today

கொரோனா பரவுதலை தடுக்க அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தால் பொதுப் போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டிருந்தது. 5ஆவது கட்டமாக அறிவிக்கப்பட்ட முடக்கத்தில் அரசுப் பேருந்துகளை மண்டலம் வாரியாக பிரித்து இயக்கலாம் என தமிழக அரசு அறிவித்தது.

இதன்படி, திருச்சி மாவட்டத்தில் கடந்த 1ஆம் தேதி முதல் அரசுப் பேருந்துகள் இயங்கத் தொடங்கின. எனினும், தனியார் பேருந்துகள் இயங்கவில்லை. இந்த நிலையில், புதன்கிழமை முதல் தனியார் பேருந்துகளும் இயங்கத் தொடங்கியுள்ளன.

திருச்சி மத்திய பேருந்துநிலையம், சத்திரம் பேருந்து நிலையங்களுக்கு காலை முதலே பேருந்துகள் கொண்டு வரப்பட்டன. ஓட்டுநர்கள், நடத்துநர்களுக்கு முகக் கவசங்கள் வழங்கி போதிய அறிவுரைகள் வழங்கி அவரவர் வழித்தடம் செல்லுவதற்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டன.

பின்னர், சமூக இடைவெளியுடன் பயணிகளை ஏற்றி மண்டலத்துக்குள் மட்டுமான போக்குவரத்து தொடங்கியது. 150-க்கும் மேற்பட்ட பேருந்துகள் முதல்நாள் இயக்கப்பட்டன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+