ராஜேந்திர பாலாஜி காலையில் மதுரை மத்திய சிறை.. மாலையில் திருச்சி மத்திய சிறை.. ஏன் என்னாச்சு?

Subscribe to Oneindia Tamil

திருச்சி: நிர்வாக காரணங்களுக்காக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மதுரை சிறையிலிருந்து திருச்சி மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார்.

Recommended Video

    நிர்வாக காரணங்களுக்காக முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி திருச்சி மத்திய சிறைக்கு மாற்றப்பட்டார்.

    அதிமுக ஆட்சியில் பால் வளத்துறை அமைச்சராக இருந்தவர் ராஜேந்திர பாலாஜி. இவர் ஆவின் நிறுவனத்தில் பணி வாங்கி தருவதாக கூறி சுமார் மூன்று கோடி ரூபாய் பெற்று மோசடி செய்ததாக குற்றம்சாட்டப்பட்டு அவரை கைது செய்விருந்த நிலையில் தலைமறைவானார்.

    தொடர்ந்து அவரை கைது செய்வதற்காக 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் பல்வேறு இடங்களில் தனிப்படை காவல்துறையினர் தேடி வந்தனர்.

    கர்நாடகாவில் சுற்றி வளைப்பு

    கர்நாடகாவில் சுற்றி வளைப்பு

    இந்நிலையில் நேற்று காலை கர்நாடக மாநிலம், ஹசன் மாவட்டத்தில் காரில் சென்று கொண்டிருந்த போது தமிழக தனிப்படை காவல்துறையினர் சுற்றி வளைத்து கைது செய்தனர். இதனை தொடர்ந்து அவர் அங்கிருந்து நேற்று இரவு விருதுநகருக்கு அழைத்து செல்லப்பட்டு அங்கு அவரிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

    குற்றவியல் நீதிமன்றம்

    குற்றவியல் நீதிமன்றம்

    இதனையடுத்து இன்று காலை விருதுநகர் மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால் மதுரை சிறையில் சட்டம், ஒழுங்கு, பாதுகாப்பு மற்றும் நிர்வாக காரணங்களுக்காக ராஜேந்திர பாலாஜியை திருச்சி மத்திய சிறைக்கு மாற்றப்பட்டதாக சிறைத்துறை அறிவித்தது.

    திருச்சி மத்திய சிறையில் அடைப்பு

    திருச்சி மத்திய சிறையில் அடைப்பு

    இதைத் தொடர்ந்து அவர் பலத்த பாதுகாப்புடன்
    திருச்சிக்கு அழைத்து புறப்பட்டனர். வரும் வழியில் மதிய உணவை முடித்து விட்டு சுமார் 3 .15 மணி அளவில்
    காவல்துறை வாகனம் சிறை வளாகத்தில் வந்தடைந்தது. இதனைத் தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

    ராஜேந்திர பாலாஜியின் முன்ஜாமீன் மனு

    ராஜேந்திர பாலாஜியின் முன்ஜாமீன் மனு

    ராஜேந்திர பாலாஜியின் முன் ஜாமீன் மனு குறித்து உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை நடத்தப்பட்டது. அப்போது முன்ஜாமீன் மனுவை விசாரிக்க இருந்த நிலையில் அவரை கைது செய்ய என்ன அவசரம் என கேள்வி எழுப்பிய உச்சநீதிமன்றம் இதுகுறித்து தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+