திருச்சி கிழக்கு.. ஓட்டு போட்டு வந்த உடனே கே என் நேரு சொன்ன முக்கியமான விஷயம்
திருச்சி: திருச்சி மக்கள் மன்றத்தில் வாக்களித்த பின்பு திருச்சி மேற்கு தொகுதி திமுக வேட்பாளர் அமைச்சர் கே என் நேரு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், "தமிழ்நாடு முழுவதும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு மக்கள் அமோக ஆதரவு அளித்து வருகிறார்கள். இந்த தேர்தல் எந்த வகையிலும் சவாலாக இல்லை. எப்பொழுதும் போல் தான் உள்ளது. ஊடகங்கள் தான் இந்த தேர்தலை சவாலான தேர்தல் என வெளியிட்டு வருகிறார்கள்.
திருச்சி கிழக்கு தொகுதியில் நிச்சயமாக உதயசூரியன் தான் வெற்றி பெறும். 9 தொகுதிகளிலும் நாங்கள் தான் வெற்றி பெறுவோம். டெல்டா மாவட்டங்களில் மிகப்பெரிய ஆதரவு திமுக கூட்டணிக்கு உள்ளது. டெல்டா மண்டலத்தில் உள்ள 41 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என்பதை நோக்கி தான் நாங்கள் தேர்தல் பணியாற்றினோம். நிச்சயமாக வெற்றி பெறுவோம் என்கிற நம்பிக்கை உள்ளது. எங்களுடைய இலக்கை நோக்கி தான் நாங்கள் பயணம் செய்து உள்ளோம் மக்களின் ஆதரவு முதலமைச்சருக்கு உள்ளது நிச்சயம் 200 தொகுதுகளில் வெற்றி பெறுவோம்" என்று கூறினார்.

திருச்சி மாவட்டத்தின் மிக முக்கியமான தொகுதியாக திருச்சி கிழக்கு இந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் பேசப்படுகிறது. காரணம் தமிழக வெற்றிக் கழகம் தலைவர் நடிகர் விஜய் இத்தொகுதியில் நேரடியாகப் போட்டியிடுகிறார். பெரம்பூர் தொகுதியுடன் சேர்த்து, திருச்சி கிழக்கிலும் அவர் களம் காண்பது இத்தொகுதி அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறி உள்ளது.
தற்போதைய எம்.எல்.ஏ-வான திமுகவின் இனிகோ இருதயராஜ் மீண்டும் களம் இறக்கப்பட்டுள்ளார். கடந்த 2021 தேர்தலில் 50,000-க்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் என்பதால், தனது செல்வாக்கைத் தக்கவைக்க கடுமையான வியூகம் செய்து போராடினார். அதேபோல் : அதிமுக சார்பில் ஜி. ராஜசேகரன் போட்டியிடுகிறார்.
கடந்த முறை இழந்த வெற்றியை மீண்டும் கைப்பற்றும் முனைப்பில் அதிமுக தீவிரமாக இருக்கிறது. தவெக சார்பில் டாக்டர் கிருஷ்ணசாமி வேட்பாளராக போட்டியிடுகிறார். இந்த முறை திருச்சி கிழக்கு தொகுதியில் ஒரு வேளை வழக்கத்தைவிட வாக்கு சதவீதம் அதிகரித்தால் விஜய் தான் காரணமாக இருப்பார் என்று கூறப்படுகிறது. இது நடக்குமா அல்லது எப்படி என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications