லலிதா கொள்ளையை தொடர்ந்து அடுத்த சம்பவம்.. பெல் கூட்டுறவு வங்கியில் கொள்ளை.. ரூ.1.50 கோடி அபேஸ்!
திருச்சி பெல் நிறுவன தொழிலாளர் கூட்டுறவு வங்கியில் சுமார் ரூ.1.50 கோடி பணம் கொள்ளை அடிக்கப்பட்டு இருக்கிறது.
திருச்சி: திருச்சி பெல் நிறுவன தொழிலாளர் கூட்டுறவு வங்கியில் சுமார் ரூ.1.50 கோடி பணம் கொள்ளை அடிக்கப்பட்டு இருக்கிறது.
கடந்த மாதம் 2ம் தேதி திருச்சி லலிதா ஜுவல்லரியில் கொள்ளை நடந்தது. இந்த கொள்ளையில் மொத்தம் 30 கிலோ தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது.
இந்த கொள்ளைக்கு பின் பலர் இருக்கலாம் என்று போலீசார் சந்தேகித்தனர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி இணையம் முழுக்க வைரலாகி உள்ளது

எல்லோரும் கைது
இந்த கொள்ளையின் மாஸ்டர் மைண்ட் முருகன் தலைமறைவாகி இருந்தார். இதையடுத்து தனிப்படை அமைக்கப்பட்டு முருகன் உட்பட இந்த கொள்ளை கும்பலில் இருந்த எல்லோரும் கைது செய்யப்பட்டனர். இவர்கள் தற்போது தீவிரமாக விசாரிக்கப்பட்டு வருகிறார்கள்.

திருச்சி கொள்ளை
இந்த நிலையில்தான் தற்போது திருச்சி பெல் நிறுவன தொழிலாளர் கூட்டுறவு வங்கியில் சுமார் ரூ.1.50 கோடி பணம் கொள்ளை அடிக்கப்பட்டு இருக்கிறது. திருவெறும்பூரில் இந்த பெல் நிறுவனம் இருக்கிறது. பெல் நிறுவனத்திற்குள் இருக்கும் வங்கியில்தான் இந்த கொள்ளை நடந்துள்ளது.

நிறுவனம் இருக்கும்
பலத்த பாதுகாப்புடன், இந்த நிறுவனம் அமைக்கப்பட்டு இருக்கும். அப்படி இருக்கும் போதும் அங்கிருக்கும் வங்கியில் கோடிக்கணக்கில் கொள்ளை நடந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

கூடுதல் விவரங்கள்
இந்த கொள்ளை தொடர்பாக விரைவில் கூடுதல் விவரங்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லலிதா ஜுவல்லரி கொள்ளையை தொடர்ந்து திருச்சியில் அடுத்த சம்பவம் நடந்து உள்ளது. இப்படி தொடர்ச்சியாக தமிழகத்தில் கொள்ளை சம்பவங்கள் அதிகரித்து இருப்பது மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications