திருச்சியில் 107 டிகிரி வெப்பம்.. முகமூடி அணிந்து எதிர்த்து.. கருப்பு கொடி காட்டி குடைபிடித்த மக்கள்
திருச்சி: அக்னி நட்சத்திரம் சனிக்கிழமை தொடங்கியதையடுத்து, வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துள்ளதால், திருச்சி மற்றும் அதனைச் சுற்றியுள்ள மக்கள் அவதிக்குள்ளாயினர்.
மேலும் வெயிலின் அளவு 107 டிகிரி பதிவானது.
திருச்சி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பிப்ரவரி தொடக்கத்தில் இருந்தே வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. ஏப்ரல் 20 முதல் 26 ஆம் தேதி வரை 104 டிகிரி பதிவானது. ஆனால்,இதுவரையான நாட்களில் உச்சபட்சமாக இருந்து வந்தது.

கத்தரி வெயில் தொடங்க 3 நாட்கள் இருந்த நிலையில் மே 2 ஆம் தேதி 105 டிகிரியும், மே 3 ஆம் தேதி 107 டிகிரியாகவும் பதிவானது. இந்நிலையில் கத்தரி வெயில் தொடங்கும் மே 4 ஆம் தேதி தொடங்கி இம்மாதம் வரை 29 ஆம் தேதி வரை அக்னி நட்சத்திர நாள்களாக இருப்பதால் வெயிலின் தாக்கம் அதிகரிக்க கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
அதன்படி சனிக்கிழமை காலை முதலே கத்தரி வெயில் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட 107 டிகிரியாக பதிவானது. இதன் காரணமாக நேற்று மதியத்திற்கு மேல் வெப்ப காற்று வீச தொடங்கியது. சாலைகளில் செல்லக்கூடிய வாகன ஓட்டிகள், பாதசாரிகள் தங்களது முகங்களை துணிகளால் மூடிக் கொண்டு சென்றனர். சிலர் குடைபிடித்தப்படி செல்வதையும் காணமுடிந்தது. கத்தரி வெயில் காலங்களில் திருச்சியை பொறுத்தவரை 2016 ஆம் ஆண்டு பதிவான 106 டிகிரி வெயிலின் தாக்கமே உச்சபட்சமாக இருந்து வந்தது.
இந்த ஆண்டில் கத்தரி வெயில் தொடங்குவதற்கு முன்பே 107 டிகிரி பதிவானதால் மீதமுள்ள நாட்களில் வெயிலின் தாக்கம் 2 முதல் 3 டிகிரி அதிகரிக்க கூடும் என்பதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
-
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது












Click it and Unblock the Notifications