திருப்பரங்குன்றம் விவகாரம்.. ராமர் கோயில் பிரச்சனை தீர்ந்துவிட்டது.. முருகனை தேடுகின்றனர்.. சீமான்!
திருச்சி: ராமர் கோயில் பிரச்சனை தீர்ந்துவிட்டதால், இப்போது முருகனை தேடுகின்றனர் என்று நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார். திருப்பரங்குன்றம் விவகாரத்தை பிரச்சனையாக்க முயற்சிப்பதாக கூறிய சீமான், இத்தனை ஆண்டுகளாக இல்லாத பிரச்சனையை இப்போது கையில் எடுப்பது ஏன் என்றும் கேள்வி எழுப்பி இருக்கின்றனர்.
ஆர்எஸ்எஸ் அமைப்பு நடத்திய பாரதி பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியது சர்ச்சையாகியது. திருப்பரங்குன்றம் விவகாரம் உச்சத்தில் இருக்கும் நிலையில், சீமானின் நடவடிக்கைகள் தமிழ் தேசிய உணர்வாளர்கள் மத்தியிலும் கடுமையாக விமர்சனத்தை பெற்று வருகிறது.

இந்த நிலையில் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து சீமான் பேசுகையில், பிப்ரவரி மாதம் லேப்டாப் கொடுக்கிறார்கள். ஏனென்றால் மார்ச் மாதம் தேர்தல் வந்துவிடும். ரூ.10 லட்சம் கோடியில் நிறைவேற்றப்பட்ட ஏதேனும் ஒரு திட்டத்தை அரசு சொல்ல வேண்டும்? மருத்துவம், கல்வி, மின்சாரம், போக்குவரத்து என்று ஏதேனும் ஒன்றை சொல்ல முடியுமா?
அதேபோல் சாதி, மதம், கடவுளை பற்றி சிந்திப்பவர்களுக்கு மக்களை பற்றி கவலை இருக்காது. நாடு, மக்கள், வளர்ச்சியை பற்றி சிந்திப்பவர்களுக்கு சாதி, மதம், கடவுள் பற்றி சிந்திக்க நேரம் இருக்காது. முருகன் மேல் என்ன திடீர் பக்தி? கடந்த ஆண்டு திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றும் போது என்ன செய்தீர்கள்? 2 மாதங்களில் தேர்தல் வருகிறது. அதனால் இப்படி செய்கிறார்கள்.
முருகனும், சிவனும் இந்துக் கடவுளா? சைவக் கடவுளா? திடீரென அவர்களுக்கு ஏன் முருகன் மீது பாசம் வருகிறது. ராமர் கோயில் பிரச்சனை தீர்ந்துவிட்டதால், இப்போது முருகனை தேடுகின்றனர். திருப்பரங்குன்றம் விவகாரத்தை பிரச்சனையாக்க முயற்சிக்கிறார்கள். இத்தனை ஆண்டுகளாக இல்லாத பிரச்சனையை இப்போது கையில் எடுப்பது ஏன்?
அதேபோல் பாரதியை பற்றி நான் எங்கு வேண்டுமானாலும் பேசுவேன். பாரதி என்றால் தமிழ். தமிழ் இருக்கும் இடத்தில் நான் இருப்பேன். எங்கு பேசினேன் என்று பார்க்காதே, என்ன பேசினேன் என்று பாருங்கள். தாய் இருக்கும் இடத்தில் மகன் இருப்பேன். நாளைக்கு திமுகவை பாரதி பற்றி கூட்டம் போட சொல்லுங்கள்.. நான் போய் பேசுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications