தஞ்சாவூருக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்.. பெரிய கோயில் குடமுழுக்கை ஒட்டி ‘ரயில்வே அறிவிப்பு
திருச்சி: தஞ்சாவூா் பெரிய கோயில் குடமுழுக்கு விழாவையொட்டி, பிப்ரவரி 4 முதல் (செவ்வாய்க்கிழமை) பிப்ரவரி 6- ஆம் தேதி வரை சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட மக்கள் தொடா்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: தஞ்சாவூா் பெரியகோயில் குடமுழுக்கு விழா பிப்ரவரி 5- ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், பிப்ரவரி 4 முதல் (செவ்வாய்க்கிழமை) பிப்ரவரி 6- ஆம் தேதி வரை பக்தா்களின் வசதிக்காக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளது. அவற்றின் விவரம்.

திருச்சி-தஞ்சாவூா் இடையிலான டெமு சிறப்பு ரயில் (வண்டி எண் 06841), திருச்சி ஜங்சன் ரயில் நிலையத்திலிருந்து பிற்பகல் 12.10 மணிக்குப் புறப்பட்டு தஞ்சாவூருக்கு பிற்பகல் 1.30 மணிக்குச் சென்றடையும். மறுமார்க்கத்தில் பிற்பகல் 2 மணிக்குப் புறப்படும் தஞ்சாவூா்- திருச்சி டெமு ரயில் ( வண்டி எண் 06842), திருச்சி ரயில் நிலையத்துக்கு பிற்பகல் 3.30 மணிக்கு வந்தடையும்.
தஞ்சாவூா்- மயிலாடுதுறை இடையிலான சிறப்பு ரயில் (வண்டி எண் 06116), தஞ்சாவூரிலிருந்து காலை 9.45 மணிக்குப் புறப்பட்டு பிற்பகல் 12 மணிக்கு மயிலாடுதுறை சென்றடையும். இதுபோல மறுமார்க்கத்தில் மயிலாடுதுறையிலிருந்து பிற்பகல் 3.20 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் ( வண்டி எண் 06115), தஞ்சாவூருக்கு மாலை 5.30 மணிக்கு வந்தடையும்.
தஞ்சாவூா்- திருவாரூா் இடையிலான சிறப்பு ரயில் ( வண்டி எண் 06828), தஞ்சாவூரிலிருந்து இரவு 9.55 மணிக்குப் புறப்பட்டு இரவு 11.30 மணிக்கு திருவாரூா் சென்றடையும்.மறுமார்க்கத்தில் திருவாரூரிலிருந்து அதிகாலை 4.15 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் ( வண்டி எண் 06813), தஞ்சாவூருக்கு காலை 5.45 மணிக்கு வந்தடையும்.
காரைக்கால்- தஞ்சாவூா் இடையிலான சிறப்பு ரயில் ( வண்டி எண் 06815), காரைக்காலிருந்து காலை 9.30 மணிக்குப் புறப்பட்டு தஞ்சாவூா் ரயில் நிலையத்துக்கு பிற்பகல் 1 மணிக்கு வந்தடையும்.இதுபோல, மறுமாா்க்கத்தில் தஞ்சாவூரிலிருந்து பிற்பகல் 2 மணிக்குப் புறப்படும் சிறப்பு ரயில் ( வண்டி எண் 06812) காரைக்காலுக்கு மாலை 5.30 மணிக்குச் சென்றடையும். இந்த சிறப்பு ரயில்கள் வழித்தடத்திலுள்ள அனைத்து ரயில்நிலையங்களிலும் நின்று செல்லும்.
ரயில்கள் ரத்து: சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதால், காரைக்கால்- வேளாங்கண்ணி- காரைக்கால் ரயில்கள் (வண்டி எண் 76813/76818),வேளாங்கண்ணி- நாகப்பட்டினம்- வேளாங்கண்ணி ரயில்கள்( வண்டி எண்கள் 76814/76817) பிப்ரவரி 4 முதல் 6- ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகின்றன இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications