Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வளைகுடாவில் பணிபுரிவோருக்கு “ஷாக்”.. திருச்சி - இலங்கை இடையே ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவை ரத்து

Subscribe to Oneindia Tamil

திருச்சி: திருச்சியில் இருந்து இலங்கைக்கு இயக்கப்பட்ட ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவை திடீரென ரத்து செய்யப்பட்டு இருக்கிறது. இதனால் வளைகுடா நாடுகளுக்கு இணைப்பு விமானம் மூலம் சென்று வரும் பயணிகள் பாதிக்கப்பட்டு உள்ளார்கள்.

இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளுக்கு திருச்சி விமான நிலையத்தில் இருந்து அதிக அளவிலான விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், இண்டிகோ, மலிண்டோ, ஸ்கூட் ஆகிய நிறுவனங்கள் இந்த விமான நிலையத்தில் இருந்து விமானங்களை இயக்கி வருகின்றன.

Srilankan airlines flight service stopped between Srilanka and Trichy airport

குறிப்பாக திருச்சியில் இருந்து இலங்கைக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் பல ஆண்டு காலமாக இயக்கப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருச்சியில் இருந்து இலங்கைக்கு பிட்ஸ் ஏர் நிறுவனம் தனது சேவையை தொடங்குவதற்கான அனைத்து பணிகளும் மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் அதன் இயக்கம் ரத்து செய்யப்பட்டது.

இதற்கு முன் திருச்சியில் இருந்து இலங்கைக்கு இண்டிகோ நிறுவனத்தின் சார்பில் விமானம் மூலம் இயக்கப்பட்டது. குறைந்த காலமே இயக்கப்பட்ட அந்த விமான சேவையும் பின்னர் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக திருச்சியில் இருந்து இலங்கைக்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் சென்று வந்தது

Srilankan airlines flight service stopped between Srilanka and Trichy airport

காலை மற்றும் மதிய நேரத்தில் இரு முறை விமானம் இலங்கைக்கு சென்று வந்தது. இதில் திருச்சியில் இருந்து வளைகுடா நாடுகளுக்கு செல்லும் பயணிகள் இலங்கை வழியாக செல்வது வாடிக்கை. இந்த பயணிகள் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தை மட்டுமே நம்பி இருக்கும் நிலை இருந்து வந்தது. திருச்சி வரும் பயணிகள் அதிக அளவில் இந்த விமான சேவையினை பயன்படுத்தி வந்தனர்.

தென் தமிழகத்திலிருந்து வளைகுடா நாடுகளுக்கு பணி நிமித்தமாக செல்லும் பயணிகள் அதிகம் என்ற காரணத்தினால் அவர்கள் திருச்சி விமான நிலையத்தில் இருந்து புறப்படும் விமான சேவைகளை பயன்படுத்தும் நிலை இருந்து வந்தது. இவ்வாறு திருச்சி விமான நிலையத்திலிருந்து இயக்கப்படும் விமான சேவைகள் வளைகுடா நாடுகளுக்கு இருந்தாலும் இலங்கை சென்று அங்கிருந்து வளைகுடா நாடுகளுக்கு செல்வதற்கு கட்டணம் குறைவாக இருந்த காரணத்தாலும் பயண நேரம் குறைவு என்பதாலும் இதனை அதிகம் பயன்படுத்தி வந்தனர்.

Srilankan airlines flight service stopped between Srilanka and Trichy airport

இதற்கிடையே கடந்த சில மாதங்களாக திருச்சி விமான நிலையத்திலிருந்து இலங்கைக்கு இயக்கப்பட்டு வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான சேவை வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் கடந்த 6 ஆம் தேதி முதல் ரத்து செய்யப்பட்டு உள்ளது. 2 சேவைகள் வழங்கி வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் தற்போது ஒரு சேவை மட்டும் வழங்கி வருகிறது. இதனால் வளைகுடா நாடுகளுக்கு செல்லும் பயணிகள் அதிக கட்டணம் செலுத்தி செல்லும் நிலை ஏற்படுகிறது.

விமான சேவை குறைக்கப்பட்டதால் பயணிகள் ஒரு விமான சேவையை மட்டுமே நம்பி இருக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. இதனை சீர்படுத்தும் வகையில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் மீண்டும் தனது இரண்டாவது சேவையை வழங்குவதுடன் ரத்து செய்யப்பட்ட இரண்டு நாட்கள் விமான சேவைகளும் மீண்டும் வழங்கிட வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். திருச்சி விமான நிலையத்திலிருந்து புதிய விமான நிறுவனங்களின் சேவைகள் இலங்கைக்கு இயக்கப்பட்டால் இது போன்ற சிரமங்கள் பயணிகளுக்கு ஏற்படாது என கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+