Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

திருச்சியில் பணியின் போது உயிரிழந்த தலைமைக் காவலர்! ரூ.25 லட்சம் நிவாரணம் அளித்த முதலமைச்சர்!

Subscribe to Oneindia Tamil

திருச்சி: திருச்சியில் பணியின் போது உயிரிழந்த தலைமைக் காவலர் குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் நிவாரணம் அளித்திருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்.

இது குறித்து அவர் விடுத்துள்ள அறிவிப்பு வருமாறு;

Stalin announced a compensation of Rs 25 lakh to the family of the head constable who died on duty in Trichy

''திருச்சி மாநகர், அரியமங்கலம் போக்குவரத்து ஒழுங்குப் பிரிவில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வந்த ஸ்ரீதர் (வயது 45) கடந்த 30-7-2023 அன்று அரிஸ்டோ இரயில்வே மேம்பாலத்தில் இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது அவ்வழியாக வந்த கார் ஒன்று மோதியதில் காயமுற்று அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

அங்கு அவர் அன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன். ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது ஏற்பட்ட விபத்தில் தலைமைக் காவலர் ஸ்ரீதர் உயிரிழந்திருப்பது காவல்துறைக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஒரு பேரிழப்பாகும்.

Stalin announced a compensation of Rs 25 lakh to the family of the head constable who died on duty in Trichy

தலைமைக் காவலர் ஸ்ரீதர் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் அவருடன் பணிபுரிபவர்களுக்கும் எனது ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்வதோடு அவரது குடும்பத்தினருக்கு இருபத்தைந்து இலட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்.''

இந்நிலையில் உயிரிழந்த காவலரின் குடும்பத்தினரிடம் 25 லட்ச ரூபாய்க்கான காசோலையை வழங்கினார் முதல்வர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+