பொன்மலையில் உருவான நவீன ரயில் எஞ்சின் - ஊட்டி மலை ரயில் சேவைக்கு அனுப்பி வைப்பு!
திருச்சி: திருச்சி பொன்மலை பணிமனையில், ரூ.9.30 கோடி மதிப்பில், 70 பேர் கொண்ட குழுவினரால், 7 மாதங்களில், புதிய தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்ட ரயில் என்ஜின், ஊட்டி மலை ரயில் சேவைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது. யுனெஸ்கோ நிறுவனம் உலக பாரம்பரிய சின்னமாக அறிவித்த ஊட்டி மலை ரயிலில், வெளிநாடு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகளும் ஆர்வமுடன் பயணம் செய்து, இயற்கை எழில் கொஞ்சும் மலைப்பகுதியில் உள்ள அழகிய காட்சிகளை கண்டு ரசித்து மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.

ஊட்டி மலையில் இயக்கப்படும் மலை ரயில், திருச்சி பொன்மலையில் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டு, ஏற்கெனவே ஊட்டி மலையில் 4 என்ஜின்கள் இயங்கி வருகின்றன. அவை நிலக்கரியில் ஓடினாலும், அவற்றை ஆன் செய்யும்போது, ஏதாவது எண்ணெயில்தான் ஆன் செய்யவேண்டும். இதற்காக உலை ஆயில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும், இந்த என்ஜினை ஆன் செய்யும்போது, அதிக அளவில் புகை எழும்புவதால், உலை ஆயிலுக்குப் பதிலாக, அதிவேக டீசல் பயன்படுத்தும் உள்நாட்டு தொழில் நுட்பத்துடன் தற்போது ரயில் என்ஜின் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பு ரயில் என்ஜினை, ரூ.9.30 கோடி மதிப்பில் 70 பேர் கொண்ட குழுவினர், கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி, 7 மாதங்களில் வடிவமைத்துள்ளனர்.
இதில், என்ஜினை ஆன் செய்ய பயன்படுத்தப்படும் அதிவேக டீசலை இருப்பு வைத்துக்கொள்ள 1,600 லிட்டர் கொள்ளளவு உள்ள டீசல் டேங்க் மற்றும் நிலக்கரி மூலம் நீராவி உருவாக்குவதற்கு, தண்ணீரை கொதிக்க வைக்க பயன்படுத்தப்படும் 4,500 லிட்டர் கொள்ளளவு கொண்ட 2 தண்ணீர் தொட்டிகளும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், இந்த புதிய ரயில் என்ஜினின் முன்பகுதியில் அதிக ஒளிரும் தன்மையுடன் கூடிய டிஜிட்டல் விளக்குகளும், என்ஜினின் உள்பகுதிளில் எல்இடி பல்புகளும் உள்ளன.
சிறப்பு ரயில் என்ஜின் வடிவமைக்கும் பணி முடிவடைந்த நிலையில், நேற்று லாரி மூலம் ஊட்டிக்கு மலை ரயில் சேவைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த என்ஜின் இயக்கத்துக்கு பின்னர், இதில் காணப்படும் நிறை மற்றும் குறைகளை கருத்தில் கொண்டு, அடுத்தடுத்த ரயில் என்ஜின்களையும் தயாரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே இதே பணிமனையில், புனரமைப்பு செய்யப்பட்ட ரயில் என்ஜின்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், அவற்றை கொண்டு ஊட்டி மலை ரயில் இயக்கப்படவுள்ளது.
-
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ்












Click it and Unblock the Notifications