திருவெறும்பூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பிராச்சாரத்தில் திடீர் மயக்கம்
திருச்சி: திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் சட்டசபை தொகுதியில் திமுக சார்பில், போட்டியிடும் எம்எல்ஏ அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தேர்தல் பிரச்சாரத்தின் போது மயங்கி விழுந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தலுக்கான இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் அனைத்து வேட்பாளர்களும் தீவிரமாக உள்ளனர். வரும் 6ம் தேதி ஓட்டுப்பதிவு நடக்க உள்ள நிலையில், இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைகிறது . அதனால், அனைத்து வேட்பாளர்களும் தீவிரமாக களத்தில் இறங்கி, பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த சில நாட்களாக, திருச்சியில் வெயில் கொளுத்தியது. பகல் 12 மணி முதல், நான்கு மணி வரை மக்கள் வெளியே நடமாட வேண்டாம், என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது.
திருச்சி திருவெறும்பூர் திமுக வேட்பாளர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கடந்த ஒரு மாதமாக தொடர்ந்து ஓய்வில்லாமல் பிரசாரம் மேற்கொண்டிருந்தார். இந்நிலையில் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை ஆதரித்து, எம்.பி.சிவா பிரச்சாரம் செய்வதாக இருந்தது.
அவரை வரவேற்பதற்காக அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருவரம்பூர் பஸ்ஸ்டாண்ட் பகுதியில் காத்து திருந்தார். அப்போது அவர் மயங்கி விழுந்ததாக தகவல் பரவியது. ஆனால், வெயில் அதிகமாக இருந்ததால் சற்று சோர்வடைந்த மகேஷ் பொய்யாமொழி அருகில் சென்று அமர்ந்து ஓய்வு எடுத்ததாக தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications