முதல்வர் அறிவித்த கட்டுப்பாடு.. திருச்சியில் மாவட்ட எல்லை வரை இயக்கப்படும் பேருந்துகள்!
திருச்சி: தமிழக முதல்வா் அறிவித்த கட்டுப்பாடுகளைத் தொடா்ந்து திருச்சி மாவட்டத்தில் எல்லை வரை மட்டுமே செல்லும் பேருந்துகள் இயக்கப்படுகிறது. பயணிகள் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. பேருந்து நிலையங்கள் வெறிச்சோடி காணப்படுகிறது.
Recommended Video
கொரோனா பொது முடக்கத்தால் நிறுத்தப்பட்டிருந்த அரசுப் பேருந்துகள் திருச்சியிலிருந்து கடந்த ஜூன் 1 முதல் மீண்டும் இயங்கத் தொடங்கின. தனியார் பேருந்துகள் ஜூன் 10 முதல் இயங்குகின்றன. திருச்சி, திருவாரூா், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, தஞ்சாவூா், அரியலூா், பெரம்பலூா் ஆகிய 7 மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதிகளில் மட்டுமே பேருந்துகள் இயங்கின.

திருச்சியிலிருந்து 180 நகரப் பேருந்துகள், 150 புறநகர் பேருந்துகள் என மொத்தம் 330 பேருந்துகளும், 250-க்கும் மேற்பட்ட தனியார் பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. பயணிகள் அனைவரும் பின்பக்க படிக்கட்டுகள் மூலம் பேருந்தினுள் அனுமதிக்கப்பட்டனா். பேருந்தில் ஏறும் முன் கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது.
வெளியூா் பேருந்துகள் என்ற வகையில் திருச்சியிலிருந்து திருவாரூா், நாகப்பட்டினம், தஞ்சாவூா், அரியலூா், பெரம்பலூா், புதுக்கோட்டை மாவட்டங்களுக்கு மட்டுமே இயக்கப்பட்டன; இதர பகுதிகளுக்குச் செல்லவில்லை. கரூா் மாவட்டத்துக்கு மட்டும் முழுமையாகச் சென்று வந்தது.
இந்நிலையில், பொதுப் போக்குவரத்துக்கான கட்டுப்பாடுகளை தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ளார் இதன்படி, ஜூன் 30 வரை மாவட்டத்துக்குள் மட்டுமே பொதுப் போக்குவரத்து அனுமதிக்கப்படுகிறது. இதனால் வியாழக்கிழமை முதல் திருச்சியிலிருந்து இயக்கப்படும் பேருந்துகள் மாவட்ட எல்லைக்குள் மட்டுமே சென்று வருகின்றன.
திருச்சியிலிருந்து மதுரை மார்க்கத்தில் செல்லும் பேருந்துகள் துவரங்குறிச்சி வரையும், புதுக்கோட்டை மார்க்கத்தில் மாத்தூா் ரவுண்டானா வரையும், தஞ்சாவூா் மார்க்கத்தில் தேவராயநேரி வரையிலும், கரூா் மார்க்கத்தில் பேட்டைவாய்த்தலை வரையிலும், திண்டுக்கல், பழனி மார்க்கத்தில் பொன்னம்பலப்பட்டி வரையிலும், சேலம் மார்க்கத்தில் மேக்கய்க்கல்நாயக்கன்பட்டி வரையிலும் இயக்கப்படுகின்றன.
மண்டலங்களுக்குள்ளான போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளதால் பயணிகள் எண்ணிக்கை மேலும் குறைந்துள்ளது. திருச்சி மத்தியப் பேருந்து நிலையத்தில் புறநகர் பேருந்துகள் நிறுத்தும் பகுதிகள் வெறிச்சோடின. நகரப் பேருந்துகள் நிறுத்தும் இடத்தில் மட்டுமே மக்கள் நடமாட்டத்தைக் காண முடிந்தது. திருச்சி மண்டலத்தில் உள்ள பிற மாவட்டங்களுக்கு செல்வோர் அந்தந்த மாவட்ட எல்லையில் இறங்கி, அடுத்த மாவட்டத்துக்கான எல்லையில் பேருந்துகள் வரும் இடங்களுக்கு நடந்து சென்று அந்த மாவட்டப் பேருந்துகளில் ஏறிச் செல்லும் நிலையுள்ளது. பேருந்துகளில் சென்று வரும் பயணிகள் சோதனை செய்யப்படாத நிலையில், முகக் கவசம் மட்டுமே அவா்கள் அணிந்து செல்வதைக் காண முடிகிறது.
-
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது!












Click it and Unblock the Notifications