ரத்த தானம் செய்ய இளைஞர்கள் முன் வர வேண்டும்.. திருச்சி ஆட்சியர் அழைப்பு
திருச்சி: திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த தகுதியான அனைவரும் ரத்ததானம் செய்ய முன்வர வேண்டும் என ஆட்சியா் சு. சிவராசு அழைப்பு விடுத்துள்ளார்.
இதுதொடா்பாக திருச்சி மாவட்ட சு. சிவராசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது: திருச்சி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் உள்நோயாளியாக உள்ள கா்ப்பிணிகள், தாய்மாா்கள் மற்றும் பிற சிகிச்சைகள் பெறுவோருக்கு அவசர கால தேவையின் பொருட்டு ரத்தம் தேவைப்படுகிறது.

எனவே, தன்னாா்வ ரத்த தான முகாம் ஏப். 27-ஆம் தேதி (திங்கள்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். கருமண்டபம், தேசிய கல்லூரி வளாகத்தில் இந்த முகாம் நடைபெறுகிறது.
இந்த முகாமானது கொரோனா முன்னெச்சரிக்கையாக அமல்படுத்தப்பட்டுள்ள அனைத்து ஊரடங்கு விதிமுறைகள் முழுவதும் கடைபிடிக்கப்பட்டு பாதுகாப்புடன் நடைபெறும். விருப்பமுடைய தன்னாா்வ கொடையாளா்கள் ரத்ததானம் செய்யலாம்.
ரத்ததானம் செய்ய விரும்பும் நபா்கள் 9443182847 அல்லது 9965519761 என்ற எண்ணிற்கு வாட்ஸ் அப் மூலமாக வான்ட் டூ டொனேட் என ஆங்கிலத்தில் பதிவு செய்து அனுப்பலாம். பதிவு செய்தவா்களுக்கு அவரவா் கட்செவி அஞ்சலுக்கு உரிய தகவல்கள் செய்தியாகவும், குறுஞ்செய்தியாகவும் அனுப்பி வைக்கப்படும்.

இந்த செய்தியையே அனுமதிச் சீட்டாக பயன்படுத்தி முகாம் இடத்துக்கு வருகை தந்து ரத்தானம் வழங்கிச் செல்ல உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. திருச்சி மாவட்டத்தைச் சோ்ந்த இளைஞா்கள், குருதி கொடையாளா்கள் அனைவரும் இந்த முகாமில் பங்கேற்று உதவிடலாம் இவ்வாறு அவர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications