Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ராமஜெயம் கொலை வழக்கு.. 13 ரவுடிகளுக்கு உண்மை கண்டறியும் சோதனையா? நவ.14-ல் மீண்டும் விசாரணை!

Subscribe to Oneindia Tamil

திருச்சி: தமிழக அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் படுகொலை தொடர்பாக 13 ரவுடிகளுக்கு உண்மை கண்டறியும் சோதனை தொடர்பான விசாரணை நவம்பர் 14-க்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

திருச்சி ராமஜெயம்.. திருச்சி திமுகவின் முகமான அமைச்சர் கே.என்.நேருவின் ஆல் இன் ஆல். திருச்சியில் பல பிசினஸ் ராமஜெயம் கண்ணசைவில்தான் நடந்து கொண்டிருந்தன. 10 ஆண்டுகளுக்கு முந்தைய திருச்சி நிலவரம் இது.

2012-ம் ஆண்டு மார்ச் 29-ந் தேதி அதிகாலையில் நடைபயிற்சி சென்ற ராமஜெயம் வீடு திரும்பவில்லை. ராமஜெயம் எங்கே போனார் என தீவிர தேடுதல் நடத்தப்பட்டது. அப்போது திருச்சி- கல்லணை சாலையில் முட்புதரில் இரும்பு கம்பிகளால் உடல் முழுவதும் கட்டப்பட்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார் ராமஜெயம்.

துப்பு துலங்காத கொலை

துப்பு துலங்காத கொலை


ராமஜெயம் படுகொலை தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இப்படுகொலை வழக்கை திருச்சி போலீசார் முதலில் விசாரித்தனர்; பின்னர் சிபிசிஐடி போலீசார் விசாரித்தனர். ஒருகட்டத்தில் சிபிஐயும் விசாரித்தது. ஆனால் ஒரு துப்பும் கிடைக்கவில்லை. ராமஜெயம் கொலை வழக்கு அவிழ்க்கப்பட முடியாத மர்ம முடிச்சாகவே தொடர்ந்தது.

12 ரவுடிகள் மீது சந்தேகம்

12 ரவுடிகள் மீது சந்தேகம்

இதனைத் தொடர்ந்து ராமஜெயத்தின் மற்றொரு சகோதரர் ரவிச்சந்திரன் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் தற்போது சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மயிலாப்பூர் அதிமுக எம்.எல்.ஏ. பாலன் கொலை வழக்கு குற்றவாளிகள் 12 பேர் மீது சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு வலுவான சந்தேகம் எழுந்தது. இதனால் அந்த 12 ரவுடிகளையும் உண்மை கண்டறியும் சோதனைக்குட்படுத்த முடிவு செய்யப்பட்டது.

உண்மை கண்டறியும் சோதனை

உண்மை கண்டறியும் சோதனை

இது தொடர்பாக பல்வேறு கொலை, கொள்ளை வழக்குகளி தொடர்புடைய 12 ரவுடிகள் நீதிமன்றத்தில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது. இதனால் 12 ரவுடிகளும் நீதிமன்றத்தில் ஆஜராகினர். ஆனால் ராமஜெயம் குடும்பத்தினர்தான் முரண்பட்ட தகவல்களை தெரிவிக்கின்றனர்; ஆகையால் அவர்களிடம் மீன்டும் விசாரிக்க வேண்டும் என ரவுடிகளின் வழக்கறிஞர்கள் வலியுறுத்தினர்.

 நவம்பர் 14-க்கு ஒத்திவைப்பு

நவம்பர் 14-க்கு ஒத்திவைப்பு

இவ்வழக்கு விசாரணை திருச்சி நீதிமன்றத்தில் திங்கள்கிழமையன்று நடைபெற்றது. அப்போது, 12 பேரிடமும் மருத்துவர்கள், வழக்கறிஞர்கள் முன்னிலையில்தான் உண்மை கண்டறியும் சோதனை நடத்த வேண்டும் என வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சிவக்குமார், இவ்வழக்கு விசாரணையை வரும் 14-ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+