அரசு பெண் மருத்துவர் விஷ ஊசி போட்டு தற்கொலை.. என்ன காரணம் என விசாரணை
திருச்சி: திருச்சியில் அரசு பெண் டாக்டர் விஷ ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதற்கு என்ன காரணம் என போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருச்சி காந்தி மார்க்கெட் தாராநல்லூரில் வில்வாஸ் நகரைச் சேர்ந்தவர் ஜெயச்சந்திரன். இவர் அரியமங்கலம் பகுதியில் அரிசி ஆலை நடத்தி வருகிறார். இவரது மகள் புனிதவதி (31).

இவர் எம்பிபிஎஸ், எம்டி படித்து முடித்துவிட்டு திருச்சி ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் டாக்டராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் டாக்டர் புனிதவதியின் பெற்றோர் கோயிலுக்கு சென்றனர்.
பின்னர் இரவில் வீடு திரும்பிய போது புனிதவதி தன் அறையில் விளக்கு எரிந்து கொண்டிருந்ததால் அவர் தூங்கவில்லை என நினைத்து பெற்றோர் தூங்கச் சென்றுவிட்டனர். ஆனால் நள்ளிரவிற்கு மேலும் விளக்கு எரிந்து கொண்டிருந்தது.
இதனால் சந்தேகமடைந்த அவர்கள் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றனர். அப்போது அவர் மயக்க நிலையில் கிடந்தார். அவருக்கு பக்கத்தில் ஒரு ஊசியும், மருந்தும் இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக திருச்சியில் ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் முதலுதவி கொடுத்து அரசு மருத்துவமனைக்க்கு அழைத்து செல்லும்படி கூறினர். அங்கு அழைத்து சென்ற நிலையில் புனிதவதியை பரிசோதித்த மருத்துவர்கள் பரிசோதனை செய்துவிட்டு அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதையடுத்து அவரது உடலை பிரேத பரிசோதனை செய்து பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
தஞ்சையில் கள்ளக்காதல்.. நள்ளிரவில் புருஷன்- சொந்த அக்காவை தீயில் கொளுத்திய அமுதா -
முதல்வர் விஜய் தொகுதியில் சூட்கேஸுக்குள் தலையில்லாத ஆண் சடலம்.. பெரம்பூர் ரயில் நிலையத்தில் ஷாக்! -
காதல் திருமணம் செய்துக்கொண்ட மகள்! பெட்ரோல் குண்டு வீசிய பாசக்கார தந்தை! நெல்லையில் ஷாக்! -
திருச்சியில் பட்டப்பகலில் கொடூரம்.. 17 வயது பெண்ணை காரில் கடத்தி பலாத்காரம்.. போலீஸ் தீவிர வலைவீச்சு -
சூடம் ஏற்றி.. தீபாராதனை காட்டி.. விஜய்-க்கு சிலை வைத்து கும்பிடும் திருச்சி தொண்டரின் குடும்பம் - வீடியோ -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது












Click it and Unblock the Notifications