குழந்தைகள் மாஸ்க் போட்டுக் கொண்டு.. சாவகாசமாக உள்ளே புகுந்த 2 பேர்.. லலிதா ஜுவல்லரி பயங்கரம்!
கொள்ளையர்களின் போட்டோவை போலீசார் வெளியிட்டுள்ளனர்
Recommended Video
திருச்சி: அடையாளமே சுத்தமாக தெரியவில்லை.. குழந்தைகள் அணியும் முகமூடியை அணிந்து கொண்டு, சாவகாசமாக 2 பேர் லலிதா ஜுவல்லரி கடைக்குள் திருடும் 2 கொள்ளையர்களின் சிசிடிவி காட்சியில் இருந்த போட்டோக்களை போலீசார் இப்போது வெளியிட்டுள்ளனர்.
திருச்சி சத்திரம் பஸ் ஸ்டாண்டில் உள்ள லலிதா ஜூவல்லரி கடையில் இன்று விடிகாலை மிகப்பெரிய கொள்ளை சம்பவம் நடந்துள்ளது.
கடையின் சுவற்றில் பெரிய துளையை போட்டு 2 பேர் உள்ளே வந்து 50 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகளை கொள்ளை அடித்துள்ளனர். 6 நைட் டியூட்டி வாட்ச்மேன்கள் கடைக்கு வெளியே பணியில் இருந்தும் இந்த கொள்ளை நடந்துள்ளது.

துளை
இதுகுறித்து கமிஷனரே நேரடி விசாரணையில் இறங்கி உள்ளார். கதவை உடைக்காமல் எப்படி கொள்ளையடிக்கப்பட்டது என்று பார்த்த போது தான் பின்பக்க சுவற்றில் துளையிட்டு மர்மநபர்கள் கொள்ளையடித்துள்ளது தெரியவந்துள்ளது. அங்கிருந்த சிசிடிவி காட்சியையும் ஆய்வு செய்ததில், கடைக்குள் நுழைந்தவர்கள் நபர்கள் 2 பேர் என தெரிகிறது.

முதல் மாடி
அவர்கள் முகமூடிகள் அணிந்துகொண்டு சாவகாசமாக நகைகளை திருடுகிறார்கள். அதாவது கீழ்தளத்தில் மொத்த நகைகளையும் கொள்ளை அடித்து கொண்டு, முதல் மாடிக்கு சென்று அங்கிருந்தும் நகைகளை கொள்ளை அடித்துள்ளனர். இவர்கள் வட மாநில கொள்ளையர்களாக இருக்கலாம் என்கிறார்கள்.

மாஸ்க்
இந்த போட்டோவைதான் போலீசார் இப்போது வெளியிட்டுள்ளனர். குழந்தைகள் அணியும் மாஸ்க் போல இருக்கிறது. விலங்குகளின் முகசாயல் கொண்ட முகமூடிகளைதான் இருவரும் அணிந்துள்ளனர். உஷாராக கையில் கிளவுஸ்களையும் அணிந்துள்ளனர். இருவரின் கண்ணை தவிர வேறு எதுவுமே அடையாளம் தெரியவில்லை. முழுவதுமாக தங்களை மறைத்து கொண்டு வந்துள்ளனர்.

சிசிடிவி போட்டோ
இவர்கள் 2 பேருமே சாவகாசமாக நடந்து சென்று கொள்ளைடிப்பது தெரிகிறது. கடையைப் பற்றி நன்றாக விஷயம் தெரிந்தவர்களே இப்படி செய்திருக்க முடியும் என்கிறார்கள் போலீசார். உள்ளே நுழைந்தது 2 பேர் என்றாலும், துளையிட்ட பகுதிக்கு வெளியே வேறு யாராவது இவர்களுக்கு கொள்ளைக்கு உதவியிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

சவால்
ஏனெனில், மொத்தம் 100 கிலோ நகைகள் கொள்ளை போயுள்ளது. திருச்சியில் இது போன்ற ஒரு மிகப்பெரிய கொள்ளை சம்பவம் இதற்கு முன் நடந்ததே கிடையாது என்பதால் இந்த சம்பவம் நம் போலீசாருக்கு மிகப்பெரிய சவாலாக அமைந்துள்ளது.
-
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல்












Click it and Unblock the Notifications