குழந்தைகள் மாஸ்க் போட்டுக் கொண்டு.. சாவகாசமாக உள்ளே புகுந்த 2 பேர்.. லலிதா ஜுவல்லரி பயங்கரம்!
கொள்ளையர்களின் போட்டோவை போலீசார் வெளியிட்டுள்ளனர்
Recommended Video
திருச்சி: அடையாளமே சுத்தமாக தெரியவில்லை.. குழந்தைகள் அணியும் முகமூடியை அணிந்து கொண்டு, சாவகாசமாக 2 பேர் லலிதா ஜுவல்லரி கடைக்குள் திருடும் 2 கொள்ளையர்களின் சிசிடிவி காட்சியில் இருந்த போட்டோக்களை போலீசார் இப்போது வெளியிட்டுள்ளனர்.
திருச்சி சத்திரம் பஸ் ஸ்டாண்டில் உள்ள லலிதா ஜூவல்லரி கடையில் இன்று விடிகாலை மிகப்பெரிய கொள்ளை சம்பவம் நடந்துள்ளது.
கடையின் சுவற்றில் பெரிய துளையை போட்டு 2 பேர் உள்ளே வந்து 50 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகளை கொள்ளை அடித்துள்ளனர். 6 நைட் டியூட்டி வாட்ச்மேன்கள் கடைக்கு வெளியே பணியில் இருந்தும் இந்த கொள்ளை நடந்துள்ளது.

துளை
இதுகுறித்து கமிஷனரே நேரடி விசாரணையில் இறங்கி உள்ளார். கதவை உடைக்காமல் எப்படி கொள்ளையடிக்கப்பட்டது என்று பார்த்த போது தான் பின்பக்க சுவற்றில் துளையிட்டு மர்மநபர்கள் கொள்ளையடித்துள்ளது தெரியவந்துள்ளது. அங்கிருந்த சிசிடிவி காட்சியையும் ஆய்வு செய்ததில், கடைக்குள் நுழைந்தவர்கள் நபர்கள் 2 பேர் என தெரிகிறது.

முதல் மாடி
அவர்கள் முகமூடிகள் அணிந்துகொண்டு சாவகாசமாக நகைகளை திருடுகிறார்கள். அதாவது கீழ்தளத்தில் மொத்த நகைகளையும் கொள்ளை அடித்து கொண்டு, முதல் மாடிக்கு சென்று அங்கிருந்தும் நகைகளை கொள்ளை அடித்துள்ளனர். இவர்கள் வட மாநில கொள்ளையர்களாக இருக்கலாம் என்கிறார்கள்.

மாஸ்க்
இந்த போட்டோவைதான் போலீசார் இப்போது வெளியிட்டுள்ளனர். குழந்தைகள் அணியும் மாஸ்க் போல இருக்கிறது. விலங்குகளின் முகசாயல் கொண்ட முகமூடிகளைதான் இருவரும் அணிந்துள்ளனர். உஷாராக கையில் கிளவுஸ்களையும் அணிந்துள்ளனர். இருவரின் கண்ணை தவிர வேறு எதுவுமே அடையாளம் தெரியவில்லை. முழுவதுமாக தங்களை மறைத்து கொண்டு வந்துள்ளனர்.

சிசிடிவி போட்டோ
இவர்கள் 2 பேருமே சாவகாசமாக நடந்து சென்று கொள்ளைடிப்பது தெரிகிறது. கடையைப் பற்றி நன்றாக விஷயம் தெரிந்தவர்களே இப்படி செய்திருக்க முடியும் என்கிறார்கள் போலீசார். உள்ளே நுழைந்தது 2 பேர் என்றாலும், துளையிட்ட பகுதிக்கு வெளியே வேறு யாராவது இவர்களுக்கு கொள்ளைக்கு உதவியிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.

சவால்
ஏனெனில், மொத்தம் 100 கிலோ நகைகள் கொள்ளை போயுள்ளது. திருச்சியில் இது போன்ற ஒரு மிகப்பெரிய கொள்ளை சம்பவம் இதற்கு முன் நடந்ததே கிடையாது என்பதால் இந்த சம்பவம் நம் போலீசாருக்கு மிகப்பெரிய சவாலாக அமைந்துள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications