என் வீட்டின் மீதான தாக்குதலால் மிகுந்த மனவேதனை.. என்னை விட கட்சிதான் முக்கியம்.. திருச்சி எம்பி சிவா
என் வீட்டின் மீதான தாக்குதல் மிகுந்த மனவேதனை கொடுக்கிறது- திருச்சி சிவா எம்பி
திருச்சி: என் வீட்டின் மீதான தாக்குதல் மிகுந்த மனவேதனையை கொடுக்கிறது என மாநிலங்களவை எம்பி திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.
திருச்சி எஸ்பிஐ காலனியில் நமக்கு நாமே திட்டத்தில் இன்று புதிய டென்னிஸ் அரங்கை தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைக்க வந்திருந்தார். அந்த திறப்பு விழா கல்வெட்டிலும் திருச்சி எம்பி சிவாவின் பெயர் இல்லாமல் இருந்தது.
இதனால் திருச்சி சிவா எம்பி ஆதரவாளர்கள் திருச்சி சிவாவை விழாவுக்கு அழைக்க வேண்டும் என கோஷமிட்டனர். மேலும் அமைச்சர் நேருவின் காரை மறித்து கருப்பு கொடியை காட்டி நேருவுக்கு எதிராக கோஷமிட்டனர். இதனால் அமைச்சர் நேரு ஆதரவாளர்களுக்கு ஆத்திரம் ஏற்பட்டது.

திருச்சி சிவா
இதையடுத்து விழா நடந்த அதே தெருவில் திருச்சி சிவா வீடு இருக்கிறது. அந்த வழியாக தங்கள் வீடுகளுக்கு திரும்பிய அமைச்சர் ஆதரவாளர்கள் திருச்சி சிவா வீட்டின் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதில் வெளியே நிறுத்தப்பட்டிருந்த கார் கண்ணாடி, ஜன்னல் கண்ணாடி உடைந்தது. மேலும் போர்டிகோவில் வைக்கப்பட்டிருந்த சேர்களை உடைத்தனர்.

சிவா வீட்டின் மீது தாக்குதல்
திருச்சி சிவா வீட்டின் மீதான தாக்குதல், அமைச்சருக்கு எதிராக கருப்பு கொடி காட்டிய சம்பவம் ஆகியவற்றில் இரு தரப்பினரையும் சேர்ந்த ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் அமைச்சர் நேரு ஆதரவாளர்கள் நேற்றைய தினம் திருச்சி நீதிமன்ற காவல் நிலையத்தில் திருச்சி சிவா ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதில் பெண் போலீஸ் சாந்திக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது.

அமைச்சர் நேரு
இந்த சம்பவம் தொடர்பாக அமைச்சர் நேருவின் ஆதரவாளர் திருப்பதி என்பவர் கைது செய்யப்பட்டார். மேலும் அமைச்சர் நேருவின் வலதுகரங்களான காஜாமலை விஜய், துரைராஜ், நேருவின் ஆதரவாளர்களான முத்துச்செல்வம், ராமதாஸ் ஆகிய 4 பேர் கட்சிக்கு களங்கம் விளைவித்ததாக கூறி இடைநீக்கம் செய்யப்பட்டனர். இதையடுத்து அவர்கள் 4 பேரும் காவல் நிலையத்தில் சரணடைந்த நிலையில் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

முதன்மை செயலாளர் நேரு
திமுக முதன்மை செயலாளராக இருக்கும் அமைச்சர் கே.என்.நேருவுக்கே இந்த நிலை என்பதால் மற்ற அமைச்சர்கள் திமுக தலைமை நடவடிக்கையால் அதிர்ந்து போயுள்ளனர். இந்த நிலையில் பஹ்ரைனுக்கு சென்றிருந்த திருச்சி எம்பி சிவா தமிழகம் வந்தார். அவர் திருச்சி விமான நிலையத்தில் கூறுகையில் நடந்த செய்திகளை நான் ஊடகங்கள் வாயிலாகவும் சமூகவலைதளங்கள் வாயிலாகவும் தெரிந்துகொண்டேன். இப்போது நான் எதையும் பேசும் மனநிலையில் இல்லை.

சோதனைகள்
கடந்த காலத்திலும் நிறைய சோதனைகளை சந்தித்துள்ளேன். நான் அடிப்படையில் ஒரு முழுமையான அழுத்தமான கட்சிக்காரன். என்னைவிட என் கட்சி முக்கியம் என்பதால் பலவற்றை நான் பெரிதுபடுத்த விரும்பவில்லை. யாரிடமும் சென்று புகார் அளித்ததும் இல்லை. தனிமனிதனை விட இயக்கம் பெரிது என்ற தத்துவம் அடிப்படையில் வளர்ந்தவன். அப்படித்தான் இத்தனை நாட்களும் இருந்தேன். இப்போது நடந்துள்ள நிகழ்ச்சி மிகுந்த மன வேதனை தந்துள்ளது.

வீட்டில் உதவியாளர்களிடம் பேச வேண்டும்
வீட்டில் உள்ள உதவியாளரிடம் நான் பேச வேண்டும். நான் ஊரில் இல்லாதபோது அவர்கள் எல்லாம் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். நான் இப்போது எதையும் பேசும் மன நிலையில் இல்லை என்றார். நீண்டகாலமாக அமைச்சர் நேருவுக்கும் திருச்சி சிவாவுக்கும் இடையே மோதல் போக்கு இருந்து வரும் நிலையில் திருச்சி சிவா என்ன செய்வார் என்பது எதிர்பார்ப்பாக உள்ளது.
-
“காங்கிரஸின் அணுகுமுறை.. ஒட்டுமொத்த கூட்டணியின் வெற்றியை சிதைக்கிறது” - திருமாவளவன் அதிருப்தி! -
அதிமுக கூட்டணியில் வெளியேறும் பூவை ஜெகன்மூர்த்தி? அதிமுகவால் மனவேதனை.. இன்று முக்கிய முடிவு -
297 வாக்குறுதி.. சாமானியர்களிடம் சென்று சேராத அதிமுகவின் தேர்தல் அறிக்கை.. ஆர்வம் காட்டாத தொண்டர்கள் -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
நயினாரை விடவே கூடாது.. சாத்தூரில் வீழ்த்த ஸ்டாலின் ‘ஸ்கெட்ச்’.. இறங்கும் திமுகவின் ‘பெரிய தலை’ -
ஜோதிடர் சொன்ன வார்த்தை? நயினார் நாகேந்திரன் நெல்லை தொகுதியில் போட்டியிடாதது ஏன்? பரபரப்பு தகவல் -
சென்னையில் 16 தொகுதிகளில் அதிமுக போட்டியிடும் 13 தொகுதிகள் விவரம்.. 3ல் கூட்டணி கட்சிகள் போட்டி -
மதுரை தெற்கில் பாஜக வெல்லுமா.. செளராஷ்டிரா வாக்குகளை நம்பும் ராம சீனிவாசன்.. பூமிநாதன் சமாளிப்பாரா? -
கீழ்வேளூரில் வடிவேல் ராவணன், அம்பத்தூரில் சேகர்.. பாமகவின் 3 வேட்பாளர்களை அறிவித்த அன்புமணி! -
30 சிறுமிகளிடம் சில்மிஷம்.. தொக்காக சிக்கிய பாஜக கவுன்சிலர் மகன்! கோவாவில் ஷாக் -
"அந்த" 54 தொகுதிகள் தான் மேஜிக்.. மம்தாவை காலி செய்ய சக்கர வியூகம்.. இறங்கி அடிக்கும் பாஜக! -
இரட்டை என்ஜின் சர்க்கார்.. ‘ஓபிஎஸ் - இபிஎஸ்’அணி சந்தித்த கடைசி தேர்தல் - 2021 ரீவைண்ட்!












Click it and Unblock the Notifications