அர்த்த ராத்திரியில் ஆபாச பேச்சு.. பள்ளி மாணவனை கணக்கு பண்ணிய கணக்கு டீச்சர்.. கடைசியில் ட்விஸ்ட்
திருச்சி: திருச்சி துறையூர் அருகே இரவு நேரத்தில் அதிக நேரம் போனில் பேசிய பள்ளி மாணவனை பெற்றோர் கண்காணித்த போது, அவர் டியூசன் சொல்லித்தரும் கணித ஆசிரியையுடன் அடிக்கடி ஆபாசமாக பேசியது தெரியவந்தது.
இதனிடையே கண்டுபிடித்து பெற்றோர் கேட்ட போது, மாணவன் தனக்கு ஆசிரியை பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறியிருக்கிறார். இதையடுத்து பாலியல் தொல்லை கொடுத்ததாக கணக்கு ஆசிரியை போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருச்சி மாவட்டம், உப்பிலியபுரத்தை அடுத்த வலையப்பட்டியை சேர்ந்த 40 வயதாகும் தேவி துறையூர் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் கணித ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர் பணி காரணமாக துறையூர் பகுதியில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக தேவியும் அவரது கணவரும் கடந்த சில மாதங்களாக பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவரிடம் டியூசன் படித்த 10-ம் வகுப்பு மாணவரின் செயல்பாடுகளில் பெற்றோருக்கு சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது. இதையடுத்து தனது மகனின் நடவடிக்கைகளை பெற்றோர் தீவிரமாக கண்காணித்தனர்.
அப்போது இரவு நேரங்களில் அந்த மாணவர், ஆசிரியை தேவியுடன் அதிக நேரம் பேசி வருவதும், படிப்பில் கவனமில்லாததும் தெரியவந்தது. இதனிடையே கடந்த மாதம் 27 ஆம் தேதி அன்று அந்த 16 வயது சிறுவனுக்கு ஆசிரியை பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுபற்றி சிறுவன் தனது பெற்றோரிடம் கூறியிருக்கிறார்.
இது பற்றி முசிறி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆசிரியை தேவி மீது மாணவனின் பெற்றோர் புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில் முசிறி அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் ஆசிரியை தேவியை போக்சோ வழக்கில் கைது செய்து திருச்சி மகளிர் சிறையில் அடைத்தனர். அந்த மாணவர் குழந்தைகள் நல காப்பகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார்.












Click it and Unblock the Notifications