அதிமுக கொடி, சின்னத்தை பயன்படுத்துவோம்.. வழக்கு போட்டா சந்திக்க ரெடி.. வரிந்துகட்டி வந்த வைத்தி!
திருச்சி : எடப்பாடி பழனிசாமியை அதிமுக பொதுச் செயலாளராகத் தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ள நிலையில், ஓபிஎஸ் அதிமுக கொடியை பயன்படுத்தக்கூடாது என எடப்பாடி தரப்பினர் கூறி வருகின்றனர். இந்நிலையில், அதிமுக கொடியை பயன்படுத்தக்கூடாது என எந்த நீதிமன்றமும் சொல்லவில்லை, அதிமுக சின்னம், கொடியை நாங்கள் பயன்படுத்துவோம், வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார்" எனக் கூறியுள்ளார் வைத்திலிங்கம்.
எடப்பாடி பழனிசாமியை அதிமுகவின் பொதுச் செயலாளராக இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ள நிலையில் அதிமுக கட்சியின் பெயர், கொடி, சின்னம் உள்ளிட்டவற்றை ஓபிஎஸ் பயன்படுத்தக் கூடாது என எடப்பாடி பழனிசாமி தரப்பினர் கூறி வருகின்றனர்.

எடப்பாடி அணி வார்னிங் : அதிமுக பொதுக்குழு தீர்மானங்களை தேர்தல் ஆணையம் ஏற்றுகொண்டதன் மூலம், ஓபிஎஸ் நீக்கம் செல்லும். அதிமுக பெயர், கொடி, சின்னத்தை ஓபிஎஸ், சசிகலா என யாரும் பயன்படுத்தக் கூடாது. மீறி பயன்படுத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என ஈபிஎஸ் தரப்பினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இதனால், வரும் ஏப்ரல் 24ஆம் தேதி திருச்சியில் நடத்த திட்டமிட்டிருக்கும் பிரமாண்ட முப்பெரும் விழா மாநாட்டை ஓபிஎஸ் எப்படி நடத்த முடியும் என்ற கேள்வி எழுந்தது. கட்சி பெயர், கொடியை பயன்படுத்தாமல் ஓபிஎஸ் தரப்பால் மாநாட்டை நடத்த முடியுமா என்ற கேள்வி எழுந்தது.
திருச்சி மாநாடு ஏற்பாடுகள் : அதிமுக பெயரையோ, சின்னம், கொடியையோ ஓபிஎஸ் பயன்படுத்தினால் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என ஈபிஎஸ் ஆதரவாளர்கள் கூறி வரும் நிலையில், திருச்சி மாநாட்டுக்கான ஏற்பாடுகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது ஓபிஎஸ் அணி. அதுவும் அதிமுக கொடி, சின்னத்தோடு மாநாட்டு ஏற்பாடுகள் தயாராகின்றன.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய ஓபிஎஸ் அணியின் இணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், "எம்.ஜி.ஆர் ஏற்படுத்திய கொடியை யார் வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். அதிமுக கொடியை பயன்படுத்தக்கூடாது என எந்த நீதிமன்றமும் சொல்லவில்லை. இரட்டை இலை சின்னம், அதிமுக கொடியை நாங்கள் பயன்படுத்துவோம், வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயார்.
ஒரிஜினல் அதிமுக : அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தான். நாங்கள் தான் உண்மையான அதிமுக. அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் இல்லை என்று தேர்தல் ஆணையம் சொல்லி உள்ளார்களா? வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. நாளை வழக்கு எப்படி வேண்டுமானாலும் மாறலாம்.
இப்போது எடப்பாடிக்கு சொந்தம் என்று எதுவுமில்லை. நீதிமன்ற தீர்ப்புக்கு கட்டுப்பட்டது என்றே சொல்லி உள்ளார்கள். திருச்சி மாநாட்டிற்கு அதிமுக மாநாடு என்ற பெயரில்தான் தொண்டர்களை அழைப்போம். நாங்கள்தான் ஒரிஜினல் அதிமுக. எடப்பாடி பழனிசாமியை வேண்டுமானால் இரண்டாவது அதிமுகவாக வைத்துக் கொள்ளலாம்." எனத் தெரிவித்துள்ளார்.
-
எடப்பாடியில் "மிஸ்ஸிங்!" 233ல் ‘வாட்சிங்!’ தமிழகம் முழுக்க ரகசிய டீமை இறக்கிய விஜய்? பரபரக்கும் தவெக -
EVM இயந்திரத்தில்.. வேட்பாளர்களின் பெயர் வரிசை தீர்மானிக்கப்படுவது எப்படி? சுவாரசிய தகவல்! -
DVAC தலைவராக நியமிக்கப்பட்டுள்ள சந்தீப் மிட்டல் பாஜக ஆதரவாளர்.. தேர்தல் ஆணையத்துக்கு திமுக கடிதம் -
கொங்கு மண்டலத்தில் அதிமுகவின் கதி அதோ கதிதான்.. புட்டுபுட்டு வைத்த அதிமுக முன்னாள் நிர்வாகி -
தேர்தலில் வாக்களிக்க இனி கைரேகை - கருவிழி பயேமெட்ரிக் அடையாளம் கட்டாயம்? உச்சநீதிமன்றம் நோட்டீஸ் -
சென்னை RK நகரில் அதிமுக வேட்பாளருக்கு.. அஜித் ரசிகர்கள் கொடுத்த ஷாக்! இது நல்லா இருக்கே! -
மதுரை வடக்கு தொகுதி.. தளபதிக்கு குடைச்சல் கொடுக்கும் சரவணன்.. தவெக பிரிக்கப் போகும் வாக்குகள்! -
"தமிழகத்தில் டெல்லி மாடல்.." அதிமுக பெரும்பான்மை பெற்றாலும் என்டிஏ ஆட்சிதான்.. ராம்தாஸ் அத்வாலே பரபர -
ரூ.8 ஆயிரத்துக்கான கூப்பன் என அறிவித்தது இதற்காகத்தான்.. கனிமொழி பிரசாரம்! -
சோழவந்தான் தொகுதி.. மீண்டும் உதிக்கும் உதயசூரியன்? 30 ஆண்டுகளுக்கு பின் நடக்கப் போகும் சம்பவம்! -
"கவுண்டர்" தான் ஆளப்போகிறார்.. எடப்பாடியின் ஜாதியை சொல்லி வாக்கு கேட்ட திண்டுக்கல் சீனிவாசன்! சர்ச்சை -
லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபியாக நியமிக்கப்பட்ட சந்தீப் மிட்டல் விடுவிப்பு.. துரைகுமார் நியமனம்.. EC அதிரடி












Click it and Unblock the Notifications