Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

செலவு பண்ண "அவ்வளவு" கோடியும் வேஸ்ட்டா.. கண்ட காட்சியால் உறைந்து போன ஓபிஎஸ்! எல்லாமே வீணாகிடுச்சாமே

Subscribe to Oneindia Tamil

திருச்சி: திருச்சியில் நடந்த முப்பெரும் விழா மாநாடு தோல்வி அடைந்த காரணத்தால் ஓ பன்னீர்செல்வம் கடும் மன வருத்தத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

அதிமுக பொதுக்குழு வழக்கில் தோல்வி அடைந்த நிலையில், தேர்தல் ஆணையமும் ஓ பன்னீர்செல்வத்திற்கு எதிராகவே முடிவு எடுத்து உள்ளது.

Why does O Panneerselvam is not happy after the Trichy meeting and What happened to him?

தேர்தல் ஆணையமும் கடந்த வாரம் எடப்பாடி பழனிசாமி கோரிக்கையை ஏற்றுக்கொண்டது. இதன் மூலம் அதிகாரபூர்வமாக அதிமுகவின் பொதுச்செயலாளர் ஆகிவிட்டார் எடப்பாடி பழனிசாமி.

இதையடுத்தே நேற்று தொண்டர்கள் பலத்தை நிரூபிக்க வேண்டும் என்று திருச்சியில் மாநாட்டை நடத்தினார் ஓ பன்னீர்செல்வம். ஓபிஎஸ் அணி சார்பில் முப்பெரும் விழா திருச்சி பொன்மலை ஜி கார்னரில் நடத்தப்பட்டது. ஆனால் இந்த மாநாடு தோல்வியில் முடிந்து உள்ளது.

ஏற்பாடு:

நேற்று நடந்த இந்த கூட்டத்திற்காக ஓ பன்னீர்செல்வம் பெரிய அளவில் ஏற்பாடுகளை செய்து வந்தார். இந்த கூட்டம் தனது அரசியல் வாழ்க்கையை மாற்றும்.

மொத்தமாக அதிமுகவை தன்னை நோக்கி திரும்பி பார்க்க வைக்கும். அதிமுகவில் தான் தலையெடுக்க இந்த ஒரு நாள் வழிவகுக்கும். திருச்சி திருப்பம் கொடுக்கும் என்றெல்லாம் ஓ பன்னீர்செல்வம் தீவிரமாக நம்பினார்.

முக்கியமாக 40 ஆயிரத்திற்கும் அதிகமான தொண்டர்களை களமிறக்க வேண்டும். கூட்டத்தை காட்டினாலே போதும் நாம் பெரிய ஆள் என்றும், நமக்கு தொண்டர்கள் ஆதரவு இருக்கும் என்று நிரூபிக்க முடியும் என்றும் ஓ பன்னீர்செல்வம் நினைத்துள்ளார்.

செலவு:

இதற்காக எப்போதும் செலவு செய்யாத ஓ பன்னீர்செல்வம் நேற்று நடந்த கூட்டத்திற்காக தீவிரமாக செலவு செய்தார். அதிமுக அலுவலகம் மாடலில் மேடை அமைத்தது தொடங்கி விழாவிற்கு வந்தவர்களுக்கு இரவு சாப்பாடு, மாலையில் சாப்பிட ஒரு சப்பாத்தி, தண்ணீர், குளிர் பானங்கள், வாகன ஏற்பாடு என்று பிரம்மாண்டமாக தயார் செய்து இருந்தார்.

இதற்காக ஓ பன்னீர்செல்வம் கிட்டத்தட்ட 20 கோடி ரூபாய் செலவு செய்து இருக்கிறார். பொதுவாக இத்தனை கோடிகளை செலவு செய்யாத அவர் நேற்று 20 கோடி ரூபாய் செலவு செய்து மீட்டிங் நடத்தினார்.

கூட்டம்

ஆனால் நேற்று 10 ஆயிரம் என்ற அளவிற்கு கூட கூட்டம் வரவில்லை. 20 ஆயிரம் சேர்கள் போடப்பட்டு இருந்தன. ஆனால் வந்தது என்னவோ பாதிக்கும் குறைவான கூட்டம்தான்.

40 ஆயிரம் பேரை எதிர்பார்த்து 20 ஆயிரம் சேர்களை போட்ட போதே ஓ பன்னீர்செல்வத்திற்கு கூட்டம் வராது என்று தெரியும் என்கிறார்கள்.

Why does O Panneerselvam is not happy after the Trichy meeting and What happened to him?

அதெல்லாம் போக நேற்று ஓ பன்னீர்செல்வம் பேசும் முன்பே பலர் கிளம்பி செல்ல தொடங்கிவிட்டனர். சாப்பாடு வாங்க சென்றுவிட்டு, கூட்டத்தில் இருந்தும் கிளம்பி சென்றுவிட்டனர்.

நேற்று ஓ பன்னீர்செல்வத்தை வரவேற்கவும் பெரிய அளவில் கூட்டம் இல்லை. அவர் வாகனம் வந்த போது.. அங்கே அவரை வரவேற்க பெரிய அளவில் கூட்டமும் இல்லை.

அங்கேயே ஓபிஎஸ் முகம் வாடியப்போய் இருந்தது. அதன்பின் மேடையிலும் மற்ற மூத்த தலைவர்கள் பெரிதும் ஆர்வம் இன்றி அமர்ந்து இருந்ததால் ஓபிஎஸ் பெரிய அளவில் அழுத்தத்துடன் காணப்பட்டார்.

வழக்கில் தோல்வி.. தேர்தல் ஆணைய விவகாரத்தில் தோல்வி.. அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்களால் அவர் மிகுந்த மன வருத்தத்தில் இருக்கிறாராம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+