Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாவம்.. பனை மரத்தின் உச்சியில் துடித்த உயிர்.. தொழிலாளியின் கடைசி நிமிடங்கள்.. பதறவைத்த தூத்துக்குடி

மரத்தில் ஏறிய பனைமர தொழிலாளி திடீரென மரணமடைந்தார்

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: பனை மரத்து உச்சியில் ஒரு மணி நேரம் உயிருக்கு போராடி இருக்கிறார் நடேசன்.. அவரை காப்பாற்ற எவ்வளவோ முயற்சித்தும் கடைசியில் அநத் பனை மர தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அடுத்துள்ள பகுதி விஜயநாராயணபுரம்.. இங்கு வசித்து வந்தவர் நடேசன்.. 63 வயதாகிறது.. இவர் ஒரு பனை மர தொழிலாளி.. கிருஷ்ணகுமார் என்பவரது தோட்டத்தில்தான் நடேசன் வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில், பதனீர் இறக்க போகிறேன் என்%ற வீட்டில சொல்லிவிட்டு கிளம்பி போயுள்ளார் நடேசன்.. ஆனால் அவர் ரொம்ப நேரமாகியும் வீட்டுக்கு திரும்பவில்லை.

பனைமட்டை

பனைமட்டை

அதனால் சந்தேகமடைந்த அவரது மனைவி கணவரை தேடி தோட்டத்துக்கு போனார்.. அப்போது பனை மரத்தின் உச்சியில் நடேசன் தொங்கி கொண்டிருந்தார்.. பனை மட்டைகளுக்கு இடையே அரை மயக்கத்தில் கிடநத்தை கண்டு அலறினார் மனைவி... சத்தம் கேட்டு அங்கிருந்தோர் ஓடிவந்தனர்.. அதில் சக பனை தொழிலாளி ஒருவர் மேலெ மரம் ஏற முயன்றார், ஆனால் அவரால் முடியவில்லை.

தகவல்

தகவல்

அதனால் உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தரப்பட்டது.. அவர்களும் விரைந்து வந்தனர்.. ஆனால், அந்த பனை மரம் ஏறும் அவர்களிடம் அடுக்கு ஏணி வசதி இல்லை.. அவர்களில் யாருக்கு.ம் பனை மரம் ஏறும் அளவுக்கு பயிற்சியும் இல்லை.. அதனால் ஏணிகளை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி, பிறகு கயிறு கட்டிக் கொண்டு பனை மரம் ஏறினர் வீரர்கள்.. இதற்கே ஒரு மணி நேரம் ஆகிவிட்டது.

மயக்கம்

மயக்கம்

மயங்கி கிடந்த நடேசனை மீட்டு அதற்குள் ஆம்புலன்சும் வரவழைக்கப்பட்டது.. ஆனல் எவ்வளவோ முயற்சித்தும் நடேசனை காப்பாற்ற முடியவில்லை.. கடைசி வரை நினைவு திரும்பாமயே நடேசன் உயிர் பிரிந்துவிட்டது. நடேசனுக்கு என்ன ஆனது? எதனால் பனைமட்டைகளுக்கு நடுவில் மாட்டிக் கொண்டார் என தெரியவில்லை.. பல வருடமாக பனை மரம் ஏறும் பழக்கப்பட்ட தொழிலாளிக்கு மரம் ஏறுவதில் பிரச்சனை இருந்திருக்காது என்றே தெரிகிறது.

தோட்ட தொழிலாளி

தோட்ட தொழிலாளி

ஆனாலும் ஒரு மணி நேரம் கஷ்டப்பட்டும் அவரை காப்பாற்ற முடியவில்லை. அதேசமயம், தீயணைப்பு வீரர்களிடம் உயரமான அடுக்குகளை கொண்ட ஏணிகள் கையிருப்பில் இல்லாதது அதிர்ச்சியை தருகிறது.. நகர்ப்புறங்களில் இல்லாவிட்டாலும், தென்மாவட்ட தோட்ட தொழிலாளர்கள் உள்ள பகுதிகளில் இந்த ஸ்கைலிப்ட எனப்படும் ஏணிகளை அவசரத்துக்கு கையில் வைத்திருக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பும்.. இன்று நடேசன் போல வேறு எந்த அப்பாவி தொழிலாளிக்கும் இப்படி ஒரு துயரம் வந்துவிடக்கூடாது!

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+