தூத்துக்குடி: வேனில் ஏறி நின்று துப்பாக்கிச் சூடு நடத்தியதாக கூறுவது கற்பனை- முதல்வர் எடப்பாடி
சென்னை: தூத்துக்குடியில் வேன்மீது ஏறி நின்று காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியதாகக் கூறுவது கற்பனைக்கதை என்று சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் கடந்த ஆண்டு மே மாதம் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டம் பெரிய அளவில் நடந்தது 100வது நாள் போராட்டத்தின் போது தூத்தக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை மக்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முடிவு செய்தனர். இதற்கு காவல் துறை அனுமதி அளிக்கவில்லை. ஆனால் தடையை மீறி தூத்துக்குடியில் பல ஆயிரம் மக்கள் ஊர்வலமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி வந்து முற்றுகையில் ஈடுபட்டனர்.

அப்போது நடந்த கலவரத்தில் போலீசார் பொதுமக்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இரண்டு நாள் போலீஸ் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். பலர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவத்திற்கு பின் உடனடியாக ஸ்டெர்லைட் ஆலை தூத்துக்குடியில் நிரந்தரமாக மூடப்பட்டது.
இந்நிலையில் இன்று காவல்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் சட்டசபையில் நடந்தது. அப்போது முதல்வர் பழனிச்சாமி, சட்டசபையில் காவல்துறை தொடர்பான உறுப்பினர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்தார். மேலும் காவல்துறையினருக்கு வீடுகள் கட்டும் திட்டத்தையும் அறிவித்தார்.
அப்போது விவாதத்தில் பேசிய காங்கிரஸ் எம்எல்ஏ ராமசாமி வண்டி மீது ஏறி துப்பாக்கியால் சுட போலீசுக்கு அனுமதி உள்ளதா என்று கேள்வி எழுப்பினார். இதற்கு குறுக்கிட்டு பேசிய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, வேன்மீது ஏறி நின்று காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியதாகக் கூறுவது கற்பனைக்கதை என்று விளக்கம் அளித்தார்.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications