அனிதா ராதாகிருஷ்ணன் vs சுபாஷ் பண்ணையார்... டிஸ்யூம்... டிஸ்யூம்... பின்னணி என்ன..?
தூத்துக்குடி: திமுக சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கும் பனங்காட்டு மக்கள் கழகத் தலைவர் சுபாஷ் பண்ணையாருக்குமான மோதல் தூத்துக்குடி மாவட்டத்தில் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட தண்டுபத்து என்ற கிராமத்தில் மறைந்த வெங்கடேஷ் பண்ணையாரின் பேனர் வைக்க அனிதா ராதாகிருஷ்ணன் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்.
இதனால் ஆத்திரமடைந்த சுபாஷ் பண்ணையார் தரப்பினர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் திமுக எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணன் காரை அடித்து நொறுக்கினர்.

2003-ல் என்கவுண்டர்
தூத்துக்குடி மாவட்டம் மூலக்கரை கிராமத்தை சேர்ந்த வெங்கடேஷ் பண்ணையார் கடந்த 2003-ம் ஆண்டு செப்டம்பர் 26-ம் தேதி போலீஸாரால் சென்னையில் என்கவுண்டர் செய்யப்பட்டார். அப்போதைய ஜெயலலிதா ஆட்சியில் வீட்டுவசதித்துறை அமைச்சராக இருந்தவர் அனிதா ராதாகிருஷ்ணன். அப்போது முதலே பண்ணையார் கோஷ்டிக்கும் அனிதா தரப்பிற்கும் ஏழாம் பொருத்தமாகவே இருந்து வருகிறது.

தண்டுபத்து கிராமம்
நாளை மறுதினம் வெங்கடேஷ் பண்ணையார் நினைவுநாள் என்பதால் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் அவரது நினைவு நாள் பேனர் வைக்க சுபாஷ் பண்ணையார் தனது ஆதரவாளர்களிடம் கேட்டுக்கொண்டார். அந்த வகையில் திமுக எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணனின் சொந்த ஊரான தண்டுபத்து கிராமத்தில் வெங்கடேஷ் பண்ணையார் உருவப்படம் தாங்கிய பேனர் வைக்க அவர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார். இது வெங்கடேஷ் பண்ணையாரின் தம்பி சுபாஷ் பண்ணையாருக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

அடித்து நொறுக்கல்
இந்நிலையில் திமுக எம்.எல்.ஏ. அனிதா ராதாகிருஷ்ணனின் பொலிரோ வாகனத்தை சுபாஷ் பண்ணையார் ஆதரவாளர்கள் இரண்டு பேர் கண் மூடித்தனமாக அடித்து நொறுக்கினர். அந்த சிசிடிவி காட்சிகளை ஆதாரமாக கொண்டு எஸ்.பி.யிடம் புகார் அளித்த அனிதா தரப்பு இந்த விவகாரத்தில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறையை வலியுறுத்தி வருகிறது. மேலும், நாளை மறுதினம் வெங்கடேஷ் பண்ணையார் நினைவு தினம் என்பதால் அனிதா ராதாகிருஷ்ணன் வீட்டுக்கும் அவருக்கு 12 போலீஸார் அடங்கிய குழுவை பாதுகாப்புக்கு நியமித்திருக்கிறார் எஸ்.பி. ஜெயக்குமார்.

திமுக எதிரியல்ல
இதனிடையே சுபாஷ் பண்ணையார் வெளியிட்டுள்ள வீடியோவில், தங்களுக்கும் திமுகவுக்கும் எந்த பிரச்சனையும் இல்லை என்றும் அனிதா என்ற தனி மனிதரை தான் தாங்கள் எதிர்த்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்தி ஒன்றாக இருக்கும் அண்ணன் தம்பிகளை சிதறு தேங்காயை போல் சிறிது நேரத்தில் பிரித்தும் விடும் சூழ்ச்சி செய்பவர் அனிதா ராதாகிருஷ்ணன் என விமர்சித்துள்ளார். மேலும், திருச்செந்தூர் தொகுதியில் திமுகவில் இருந்து விலகி சுயேச்சையாக போட்டியிட தயாரா என்றும் சவால் விடுத்துள்ளார்.

நினைவு நாள் அனுசரிப்பு
அனிதா ராதாகிருஷ்ணனின் சொந்த ஊரில் தனது அண்ணன் வெங்கடேஷ் பண்ணையாரின் நினைவுநாள் நிகழ்ச்சியை நடத்தி தீருவோம் என்றும் முடிந்தால் பனங்காட்டு மக்கள் கழகத்தை தடுத்துப் பார் எனவும் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு சுபாஷ் பண்ணையார் சவால் விடுத்திருக்கிறார். இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் பதற்றம் அதிகரித்துள்ளது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் நிலவரத்தை உன்னிப்பாக கவனித்து வருவதோடு நிலைமையை சகஜமாக்க தன்னால் இயன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
-
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல் -
கண் முன்னே வெடிக்கும் உலக போர்! வளைகுடா மோதலில் உள்ளே வரும் உலக நாடுகள்.. உச்சக்கட்ட பதற்றம் -
ஈரானின் புதிய சுப்ரீம் லீடரும் மரணம்? குழப்பத்தில் பொதுமக்கள்.. ரஷ்யா தரப்பு சொன்ன முக்கியமான தகவல் -
அதிமுக பாஜகவை தோற்கடிப்போம்.. அண்ணாமலையின் அன்பு கூட்டம் தடாலடி முடிவு.. அதிர்ச்சியில் டெல்லி -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை -
கவனம் ஈர்த்த விஜயின் TVS XL.. ஓ இதுக்குத்தானா.. இதுலையும் ரஜினியை பார்த்து காப்பியா?












Click it and Unblock the Notifications