அண்ணாமலை ஐபிஎஸ் படிக்க காரணமே திமுக தான்.. அமைச்சர் செஞ்சி மஸ்தான் அதிரடி பேட்டி!
தூத்துக்குடி: திமுக பெற்ற அடிப்படை உரிமைகளால் தான் அண்ணாமலை ஐபிஎஸ் படிக்க முடிந்தது என்று அமைச்சர் செஞ்சி கே.மஸ்தான் தெரிவித்துள்ளார்.
Recommended Video
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அந்நாட்டு மக்கள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளனர். இதனால் இலங்கை மக்களுக்கு உதவும் வகையில் தமிழக அரசு சார்பில் அத்தியாவசிய பொருட்கள், மருந்து பொருட்கள் உள்ளிட்டவை தமிழகத்தில் இருந்து அனுப்பி வைக்கப்படும் என அறிவிகப்பட்டது.
அதன்படி சென்னையில் இருந்து கடந்த மாதம் கப்பல் மூலம் முதற்கட்டமாக நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.

இலங்கைக்கு நிவாரணம்
இதன் தொடர்ச்சியாக இரண்டவது கட்டமாக பொருட்கள் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் வழியாக இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த கப்பலை அனுப்புவதற்காக அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் உள்ளிட்டோர் தூத்துக்குடி வந்தனர். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செஞ்சி கே.மஸ்தான், தமிழ்நாடு மக்கள் மத்திய அரசு கொண்டு வந்த நினைக்கும் நீட் தேர்வு, வேளாண் சட்டம் போன்றவற்றை போலதான் இப்போது கொண்டு வரப்பட்டுள்ள அக்னிபாத் திட்டத்தையும் நினைக்கின்றனர். அதனால் தான் தமிழகத்தில் எதிர்ப்பு அதிகம் உள்ளது.

ஒற்றை தலைமை
ஒற்றைத் தலைமை விவகாரம் அதிமுகவிற்கு ஒன்றும் புதிதல்ல. எம்ஜிஆர் மறைவுக்கு பின் தொடர்ச்சியாக நடந்து வரும் சம்பவம் இது. அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரத்தில் பாஜக தலையிடாது. ஏனென்றால் அதிமுகவில் பெரிய அடிமை யார்?, சின்ன அடிமை யார்? என்பதை மட்டும் தான் பாஜக பார்க்கும் என்று விமர்சித்தார்.

படிக்க வைத்தோம்
தொடர்ந்து திமுக குறித்து தவறாக விமர்சித்து வரும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, படித்து பட்டம் பெற்றவர். அவருக்கு திமுகவின் வராலாறு, அடித்தளம், கொள்கை, லட்சியம் பற்றி எதுவும் தெரியவில்லை. அவர் திமுக வரலாற்றை தெரிந்து கொள்ளலாம். ஏனென்றால் திமுக உருவாகியதினால் தான் கஷ்டப்படும் மக்கள் வளர்ச்சியடைய முடிந்தது. திமுக பெற்ற அடிப்படை உரிமைகளால் தான் அண்ணாமலை ஐபிஎஸ் படிக்க முடிந்தது. கொள்கை இல்லாத இடத்தில் இருந்து கொண்டு அண்ணாமலை சிக்கித் தவித்து வருகிறார் என்று அமைச்சர் செஞ்சி கே.மஸ்தான் தெரிவித்தார்.

தூத்துக்குடி டூ இலங்கை
மேலும் இலங்கைக்கு இதுவரை இரு கட்டமாக நிவாரண பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து மூன்றாவது கட்ட நிவாரண பொருட்களும் அனுப்பும் திட்டமிட்டுள்ளது. தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு செல்வது எளிதாக இருப்பதால் மூன்றாவது கட்ட நிவாரண பொருட்கள் அனுப்பும் பணியும் தூத்துக்குடியில் இருந்தே தொடங்கும் என்று தெரிவித்துள்ளார்.











Click it and Unblock the Notifications