Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

31 தொகுதிகளில் 33 ஆயிரம் ஓட்டுகளை வாங்கியவர் புதிய தமிழகம் கிருஷ்ணசாமி! எடப்பாடி பழனிசாமி அட்டாக்

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: 31 தொகுதிகளில் போட்டியிட்டு மொத்தம் 33 ஆயிரம் ஓட்டு வாங்கிய கிருஷ்ணசாமிக்கு எத்தனை சீட்டுகள் கொடுக்க முடியும் என அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி மேலும் கூறுகையில், புதிய தமிழகம் கட்சியுடன் நாங்கள் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தவில்லை. வேறு ஒருவர் மூலமாக முதலில் 10 தொகுதிகளை கேட்டனர். முடியாது என்றோம். பின்னர் 5 தொகுதிகளை குறைத்துக் கொண்டு 5 தொகுதிகளை கேட்டனர். அதற்கும் தர முடியாது என நாங்கள் சொல்லிவிட்டோம்.

EPS Slams Krishnasamy

கடந்த 2021 ஆம் ஆண்டு எங்களுடன் அவர் கூட்டணி வைக்கவில்லை. இதை சொல்லக் கூடாது, ஆனால் அவர் சொல்ல வைத்துவிட்டார். ஒவ்வொரு கட்சியும் கூட்டணியில் சேரும் போது அந்த கட்சி பெற்ற வாக்குகளின் அடிப்படையில்தான் சீட் கொடுப்பது வழக்கம். 31 தொகுதிகளில் போட்டியிட்டு 33 ஆயிரம் வாக்குகள் பெற்ற கிருஷ்ணசாமிக்கு எத்தனை தொகுதிகள் கொடுக்க முடியும்?

அதிமுக, திமுக ஆகிய கட்சிகள் எல்லாருமே இப்படித்தான் விதிகளை கடைபிடித்து வருகிறார்கள். எங்களுடன் கிருஷ்ணசாமி நேரடியாக பேச்சுவார்த்தை நடத்தவில்லை. அவருக்குத் தேவையானவரை அனுப்பியிருந்தார். நாங்கள் இயலாது என சொல்லிவிட்டோம். இவ்வாறு எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம் இடம் பெறும் என நினைத்திருந்த நிலையில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி தனித்து போட்டி என அறிவித்தார். மேலும் தங்கள் கட்சியை அதிமுக புறக்கணித்துவிட்டதாகவும் மதிக்கவில்லை என்றும் குற்றச்சாட்டை முன் வைத்திருந்தார்.

இதுகுறித்து புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில், "2026 சட்டமன்றத் தேர்தலில் புதிய தமிழகம் கட்சியின் நிலைப்பாடு குறித்து முடிவெடுக்க மார்ச் மாதம் 21-ஆம் தேதி மதுரையிலும்; 25, 26 ஆகிய தேதிகளில் கோவையிலும் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் & நேர்காணல் கூட்டம் நடைபெற்றது.

கடந்த 30 ஆண்டுகள் தென்தமிழகத்தில் தொடர்ச்சியாக, அரசியல் களத்தில் நிலைத்து நின்று, செயல்பட்டு வரும் புதிய தமிழகம் கட்சிக்கு, கூட்டணியில் நமது கட்சியின் வலிமைக்கு ஏற்ப எண்ணிக்கையும், வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளையும் வழங்குவதில் காட்டப்பட்ட பாரபட்சம் குறித்து விவாதிக்கப்பட்டது. ஒன்றரை கோடிக்கும் மேற்பட்ட தேவேந்திரகுல வேளாளர் மக்களின் பேராதரவுடன் இயங்கும் புதிய தமிழகம் கட்சிக்கு உரிய அரசியல் அங்கீகாரம் அளிக்கப்படாமல் புறக்கணித்துள்ளனர்.

இந்த சூழலில், இத்தேர்தலில் தேவேந்திரகுல வேளாளர் சமூக மக்களின் தன்னிகரில்லாத் தலைவர் டாக்டர் அய்யா அவர்களின் கரத்தை வலுப்படுத்துவதும், நம் மக்கள் ஒன்றுபட்டு நிற்பதும், நம்மை புறக்கணித்தவர்களை நாம் புறக்கணிப்பதும் மட்டுமே 'உண்மையான அரசியல் வெற்றி' என்பதை நிலைநாட்டும் பொருட்டு, புதிய தமிழகம் கட்சி இந்தத் தேர்தலில் தனித்துப் போட்டியிட ஏகமனதாக முடிவு செய்யப்பட்டது.

கடந்த 25, 26 ஆகிய தேதிகளில் 21 மாவட்டங்களைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் வேட்பாளர் தேர்வு நேர்காணலில் கலந்துகொண்டனர். புதிய தமிழகம் கட்சி வலுவாக உள்ள 120 தொகுதிகளில், வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ள 60 முதல் 70 தொகுதிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு; அத்தொகுதிகளில் போட்டியிடும் புதிய தமிழகம் கட்சி வேட்பாளர்களின் பட்டியலை 29-ஆம் தேதி சென்னையில் புதிய தமிழகம் கட்சியின் தலைமை அலுவலகத்தில் தலைவர் டாக்டர் ஐயா அவர்கள் வெளியிட உள்ளார்கள்.

எனவே, புதிய தமிழகம் கட்சியின் நிர்வாகிகள் அனைவரும் இந்நிகழ்ச்சியில் தவறாது கலந்துகொள்ள வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம். ஒன்றுபட்டு நின்று, நம்மை புறக்கணித்தவர்களை, நாம் புறக்கணிப்போம்" என்று அந்த அறிக்கையில் கூறியிருந்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+