மூட்டை மூட்டையாய் அரிசி.. பசியில் தவித்த புன்னக்காயல் மக்கள்.. கடல் வழியே உதவிய மீனவர்கள் - நெகிழ்ச்சி
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த கனமழையால் தாமிரபரணி கரையோரம் அமைந்துள்ள புன்னக்காயல் கிராமத்தில் இன்னும் வெள்ளம் வடியவில்லை. அரசின் உதவிகள் மக்களை சென்றடையாத நிலையில் அருகே உள்ள மீனவ கிராமத்தினர் கடல் வழியாக படகில் சென்று மூட்டை மூட்டைகளாக அரிசி உள்ளிட்ட உணவு பொருட்களை வழங்கி நெகிழ வைத்தனர்.
சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களை தொடர்ந்து தென்தமிழகம் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ககடந்த 17, 18 தேதிகளில் இடைவிடாது மழை பெய்தது.

இந்த மழையில் தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்கள் ஓரளவு பாதிக்கப்பட்டன. ஆனால் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்கள் அதிகளவில் பாதிப்பை சந்தித்தது. வரலாறு காணாத வகையில் தொடர்ந்து அதிகமாக கொட்டித்தீர்த்த மழையே இதற்கு காரணமாகும்.
தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தமட்டில் சாலைகள், கிராமங்களை முழுவதுமாக வெள்ளம் சூழ்ந்தது. இதனால் வாகன போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. மேலும் விமான, ரயில் போக்குவரத்தும் முடங்கியது. படகுகள் கூட செல்ல முடியாத அளவிற்கு பெருவெள்ளம் பெருக்கெடுத்தது. இதனால் மக்கள் உதவியின்றி தவித்தனர். கிராம இளைஞர்களை துணிச்சலாக செயல்பட்டு மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சென்றனர்.
தற்போது அங்கு மழை குறைந்துள்ள நிலையில் வெள்ள நீரை வெளியேற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. முதல்வர் ஸ்டாலின் இன்று தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் ஆய்வு செய்து மக்களுக்கான நிவாரண உதவிகளை வழங்கினார். இது ஒருபுறம் இருக்க தூத்துக்குடி மாவட்டத்தில் இன்னும் பல இடங்களில் மழைநீர் வடியவில்லை. வீடுகளை சுற்றி மழைநீர் தேங்கி உள்ளதால் மக்கள் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர்.
மேலும் பல கிராமங்களில் அரசு உதவிகள் கிடைக்காத நிலை உள்ளது. குறிப்பாக தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் அருகே அமைந்துள்ள புன்னக்காயல் கிராமத்தில் மழைநீர் இன்னும் வடியாமல் அப்படியே தேங்கி உள்ளது. இதற்கு முக்கிய காரணம் அங்கு ஓடும் தாமிரபரணி ஆறுதான். திருநெல்வேலி மாவட்டம் பொதிகை மலையில் உருவாகும் தாமிரபரணி ஆறு இந்த புன்னக்காயல் கிராமத்தில் தான் கடலில் கலக்கும். ஆனால் தாமிரபரணியில் திறக்கப்பட்ட அதிகபட்ச தண்ணீரால் கிராமத்துக்குள் தண்ணீர் சூழ்ந்தது.
இதனால் புன்னக்காயல் கிராமம் குட்டி தீவுப்போல் காட்சியளிக்கிறது. இத்தகைய சூழலில் தான் கிராமத்தில் வசிக்கும் மக்களுக்கு உணவு, குடிநீர் உள்ளிட்டவை கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்கள் பசியால் துடித்தனர். இதனையறிந்தவுடன் அருகே உள்ள மீனவ கிராமத்தினர் படகு மூலம் கடல் வழியாக புன்னக்காயல் கிராமத்துக்கு சென்று மூட்டை மூட்டையாக அரிசி உள்ளிட்ட உணவு பொருட்களை புன்னக்காயல் மக்களுக்கு வழங்கினர். மேலும் தண்ணீர் பாட்டில்கள் உள்பட அத்தியாவசிய பொருட்களை வழங்கினர். மீனவ கிராம மக்களின் இந்த உதவியால் புன்னக்காயல் மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
-
விவாகரத்து முடியாமல் 'டூயட்' பாடினால் 10 ஆண்டு சிறை? - விஜய்க்கு சிக்கலாகும் பிரிவு 69.. மாட்டுனாரு -
Sani Peyarchi: சனிப்பெயர்ச்சி மேஷம் முதல் மீனம் வரை.. 12 ராசிகளும் பெறப்போகும் பலன்கள்.. முழு விவரம் -
அமெரிக்காவை கைவிடும்.. சவுதி அரேபியா, குவைத், யு.ஏ.இ, கத்தார்.. அமெரிக்க சாம்ராஜ்யத்தின் அஸ்தமனம்? -
தாம்பரத்தில் இருந்து வேளச்சேரி மயிலாப்பூர் வழியாக கடற்கரைக்கு ரயில்கள்.. ரயில்வேக்கு பறந்த கோரிக்கை -
பர்மிஷன் கொடுக்க டிரம்ப் யாரு? இந்தியாவின் இறையாண்மை அமெரிக்காவின் கையில் அடகு? ஷாக் சம்பவம் -
அது விக்கெட் இல்லமா.. வான்கடே மைதானத்தில் துள்ளிக் குதித்த சாக்ஷி.. அமைதிபடுத்தி கிண்டல் செய்த தோனி -
உங்களுக்கு பதவி வேணும்னா.. அப்போ நான் எதுக்கு.. பிரேமலதாவிடம் பொங்கிய சுதீஷ்.. என்ன நடந்தது? -
எங்களுடைய நட்சத்திர பேச்சாளரை இழந்துள்ளோம்.. ஆளுநர் ஆர்.என்.ரவி டிரான்ஸ்பர் குறித்து திமுக -
கடவுளே.. பும்ராவே.. வான்கடே மைதானத்தில் பிசிசிஐ சிலை வைக்கணும்.. தெறிக்கும் ரசிகர்களின் மீம்ஸ்! -
அவரு மட்டும் வரல.. அவங்களையும் கூட்டிட்டு வந்திருக்காரு! விஜய் செயலால் டென்ஷனான தவெகவினர்! -
விண்ணிலிருந்து.. பாய்ந்து வந்த அஸ்திரம்! ஒரே நொடியில் ஈரானின் எதிர்காலமே மாறிவிட்டது.. என்ன நடந்தது? -
இனிமேல் சர்ச்சில் பேசாதப்பா.. விஜய் - திரிஷா செயலால்.. கோபம் அடைந்த உறவுகள்? பரபரப்பு போஸ்ட்!












Click it and Unblock the Notifications