தூத்துக்குடியில் மீண்டும் களம் இறங்கிய கீதாஜீவன்... ஸ்டாலினுக்கு வெற்றியை பரிசளிப்பாரா!
தூத்துக்குடி: 173 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை திமுக இன்று வெளியிட்டது. இதில் தூத்துக்குடி தொகுதியில் தற்போதைய எம்.எல்.ஏ. கீதா ஜீவனுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி திமுகவில் தான் மறையும் வரை கோலோச்சிய, பெரியசாமியின் மகள்தான் கீதா ஜீவன். 2006-11 வரையிலான கருணாநிதி ஆட்சி காலத்தில் அமைச்சராகவும் பணியாற்றியவர் கீதா ஜீவன்.

தமிழக தேர்தல் களம் ஜெட் வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. திமுக, அதிமுக என முக்கிய கட்சிகள் பம்பரமாக சுழன்று வருகின்றன. அதிமுக 177 தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியலை அறிவித்து விட்டது. மேலும், பாஜக, பாமகவுக்கு தொகுதிகளை ஒதுக்கி கொடுத்து விட்டது. மேலும், மக்கள் நீதி மய்யம், அமமுக கட்சிகள் வேட்பாளர் பட்டியல் வெளியிட்டு வருகின்றன.
திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அந்த கட்சிகளும் வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகின்றன. தொகுதி பங்கீட்டில் தாமதம் ஏற்பட்டதால் திமுகவும் வேட்பாளர் பட்டியலை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது. இன்று காலை வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்று திமுக அறிவித்தது.
அதன்படி 173 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை திமுக இன்று வெளியிட்டது. இதில் தூத்துக்குடி தொகுதியில் தற்போதைய எம்.எல்.ஏ. கீதா ஜீவனுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி திமுகவில் தான் மறையும் வரை கோலோச்சிய, பெரியசாமியின் மகள்தான் கீதா ஜீவன். 2006-11 வரையிலான கருணாநிதி ஆட்சி காலத்தில் அமைச்சராகவும் பணியாற்றியவர் கீதா ஜீவன்.
தொடர்ந்து 2016-ல் நடந்த தேர்தலில் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக இருந்து வருகிறார். தூத்துக்குடி தொகுதியில் தந்தை பெரியசாமியை போல் கீதா ஜீவன் கோலோச்சி வருகிறார். இதனை தொடர்ந்து வழக்கம்போல் தற்போது கீதா ஜீவனுக்கு திமுக வாய்ப்பு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications