Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இன்ஸ்டா ரீல்ஸ்க்காக.. குளத்தில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்த தூத்துக்குடி ரஞ்சித் பாலா.. கடைசியில் ஆப்பு

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே சாத்தான்குளத்தில் இன்ஸ்டா ரீல்ஸ்க்காக குளத்தில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து தீயில் குதித்து வீடியோ எடுத்த யூடியூபர் ரஞ்சித் பாலா, அவரது நண்பர் சிவகுமார் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். லைக்குகள் வாங்குவதற்காக இப்படி வீடியோ எடுத்து கடைசியில் கம்பி எண்ணி வருகின்றனர்.

தூத்துக்குடி அருகே சாத்தான்குளத்தில் விபரீத சாகத்தில் ஈடுபட்ட 2 யூடியூபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கான லைக்குகளை வாங்குவதற்காக இப்படி விபரீத வீடியோவை எடுத்துள்ளனர். விபரீத வீடியோ எடுத்த 3 பேர் மீது 5 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

In Tuticorin Two youth arrested for Dangerous Stunt for youtube Videos

சாத்தான்குளம் வாலாந்தூரையை சேர்ந்தவர் யூடியூபர் ரஞ்சித் பாலா. இவரது நண்பர்கள் சிவகுமார், இசக்கி ராஜா. யூடியூபர் ரஞ்சித் பாலா இன்ஸ்டாவில் வீடியோ போட்டு வருகிறார். 22 லட்சம் சப்ஸ்க்ரைபர்களை வைத்திருக்கிறார் ரஞ்சித் பாலா. இவரது வீடியோவிற்கு பல லட்சக்கணக்கான பார்வைகளையும், லைக்குகளையும் பெறுகிறார். இப்படியாக வித்தியாசமான் வீடியோக்களை பதிவிட்டு அதன் மூலம் பல லட்சங்களை சம்பாதித்து இருக்கிறார்.

இருந்தாலும் இன்னும் அதிகம் சப்ஸ்கிரைபர்கள் வேண்டும் என்றும், லைக்குகளை அதிகம் வாங்க வேண்டும் என்று ஆசைப்படு வித்தியாமான, சாகச வீடியோக்களை எடுக்க திட்டமிட்டுள்ளார். இதன்படி தான் சாத்தான்குளம் அருகே உள்ள ஒரு குளத்தில் பெட்ரோலை ஊற்றி அதில் தீயை பற்ற வைத்து தீயில் குதித்து வீடியோ எடுக்க திட்டமிட்டுள்ளார். அதன்படி, ஒருவர் குளத்தில் பெட்ரோலை ஊற்றுகிறார். இன்னொருவர் அதில் தீயை கொளுத்தி போடுகிறார

தீ பற்றி எரிந்ததும் தூரத்தில் இருந்து ஓடி வந்து தீயில் தலைகீழாக குதிக்கிறார். குளத்தின் மேற்பரப்பில் தீ கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருக்கும் நிலையில், ஆபத்தை பொருட்படுத்தாமல் வியூவ்ஸ், லைக்குகளுக்காக அதில் தலைகீழாக குதிக்கிறார். இந்த வீடியோவை இன்ஸ்டாவில் போட்டுள்ளனர். இந்த விபரீத வீடியோ இணையத்தில் வேகமாக பரவியது. அப்படியே இந்த வீடியோ போலீஸ் கண்ணிலும் பட்டுள்ளது.

இதையடுத்து நடவடிக்கை மேற்கொண்ட போலீசார் இப்படி லைக்குகளுக்காக இப்படி விபரீத சாகசம் செய்த யூடியூபர்கள் மீது போலீசார் 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். இதில், யூடியூபர் ரஞ்சித் பாலா மற்றும் அவரது நண்பர் சிவகுமார் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

யூடியூப், இன்ஸ்டாகிராமில் சினிமா பாடல்கள், சினிமா வசனங்களுக்கு டப்பிங் பேசி பலர் வீடியோ வெளியிட்டு வருகின்றனர். இன்ஸ்டா, யூடியூப்களில் நல்ல வருமானமும் கிடைப்பதால், பலர் முழு நேரமாக வீடியோ போட்டு பணம் சம்பாதிக்கவும் செய்கிறார்கள். நல்ல முறையில் வீடியோ போட்டு பலர் லைக்ஸ்களை பெற்று வரும் நிலையில், சிலர் லைக்ஸ்களுக்காக விபரீதத்திலும் ஈடுபடுகிறன்றனர்.

வித்தியாசமாக எதையாவது செய்கிறேன் என்ற பெயரில் பைக்குகளில் சாகசம் செய்வது.. உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் விதமாக எதையாவது செய்து வம்பில் சிக்கிக் கொள்வதையும் காண முடிகிறது. இப்படி வரம்பு மீறிய வீடியோக்களால்.. போலீசாரிடம் சிக்கி கம்பி எண்ணும் நிலைக்கு செல்வதற்கு பதிலாக ஆரோக்கியமான முறையில் நல்ல வீடியோக்களை பதிவிடுவதில் இதுபோன்ற யூடிபர்கள் கவனம் செலுத்தலாம் என்று சொல்கிறார்கள் நெட்டிசன்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+