பெரியார் குறித்த அவதூறுக்கு ரஜினிகாந்த் தகுந்த விலை கொடுப்பார்: கி. வீரமணி
Subscribe to Oneindia Tamil
Recommended Video
துக்ளக் விழாவில் ரஜினி சொன்ன பால்காரர் கதை!
தூத்துக்குடி: தந்தை பெரியார் குறித்த அவதூறுக்கு நடிகர் ரஜினிகாந்த் தகுந்த விலை கொடுப்பார் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த கி. வீரமணியிடம், துக்ளக் ஆண்டு விழாவில் ரஜினிகாந்த் தமது பேச்சுக்கு வருத்தம் தெரிவிக்காதது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த வீரமணி, இதற்கு தகுந்த விலையை ரஜினிகாந்த் கொடுப்பார்; தவறான தகவலை தெரிவிக்கும் போது மற்றவர் சுட்டிக்காட்டினால் அதை ஏற்று திருத்திக் கொள்வதுதான் சரி என்றார்.

மேலும் ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் அவர் எப்படி பேசுவார் என்பது அனைவருக்கும் தெரியும். தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து அவர் என்ன நிலை எடுத்தார் என்பது எல்லோருக்கும் தெரிந்தது என்றும் வீரமணி கூறினார்.












Click it and Unblock the Notifications