'ஆன் தி வேயில்' அப்படியே ஒரு டீ சொல்லுங்க! சாப்பிடக் கூட நேரமில்லாமல் தொகுதியை வலம் வந்த கனிமொழி!
தூத்துக்குடி: சாப்பிடக் கூட நேரமில்லாமல் தனது தூத்துக்குடி தொகுதியில் தொடர் நிகழ்ச்சிகளில் பங்கேற்ற கனிமொழி எம்.பி. போகிற போக்கில் காரை நிறுத்தி பேக்கரி ஒன்றில் மிகவும் கேசுவலாக தேநீர் குடித்திருக்கிறார்.
தனது கணவர் அரவிந்தன் உடல்நலக் குறைவு காரணமாக அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த காரணத்தால் கனிமொழியால் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக தொகுதிப் பக்கமே வர முடியவில்லை.
இதனால் ஏராளமான பணிகள் அப்படியே தேங்கிக் கிடந்த நிலையில் இன்று காலை முதல் சங்கு சக்கரத்தை போல் தொகுதியில் சுற்றி சுழன்றடித்தார்.

கனிமொழி எம்.பி.
கனிமொழியை பொறுத்தவரை வாரத்தில் குறைந்தது 2 நாட்களாவது தனது தொகுதியில் இருப்பார். இந்நிலையில் அவரது கணவர் அரவிந்தனுக்கு ஏற்பட்ட நுரையீரல் தொற்று காரணமாக சிங்கப்பூர் மருத்துவமனையிலும், அதைத் தொடர்ந்து சென்னை அப்போலோ மருத்துவமனையிலும் அவர் சிகிச்சை பெற்று வந்ததால் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக மருத்துவமனையில் உடனிருந்து கணவரின் உடல்நலத்தை கவனித்துக் கொண்டார் கனிமொழி.

பணிகள் தேங்கி நின்றன
இதன் காரணமாக அவரது ஆய்வுப் பணிகள் அப்படியே தேங்கி நின்றன. இதனிடையே அரவிந்தனின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதால் மீண்டும் தொகுதிப்பணி, நாடாளுமன்றப் பணி என பிசியாகிவிட்டார் கனிமொழி. இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம், காயல்பட்டினம், குலசேகரப்பட்டினம், உடன்குடி, கருங்குளம், சேரகுளம், செதுங்கநல்லூர், விட்டிலாபுரம், தூத்துக்குடி என காலை முதல் இரவு 7.30 மணி வரை கனிமொழி பங்கேற்க வேண்டிய நிகழ்ச்சிகள் தொடர்ச்சியாக இருந்திருக்கின்றன.

சாப்பிடக் கூட நேரமில்லாமல்
இதனால் சாப்பிடக் கூட நேரமில்லாமல் கனிமொழி தொகுதியை ரவுண்டு அடித்திருக்கிறார். அதிகாரிகள் கூட ஓய்வெடுப்பதாக இருந்தால் எடுத்துவிட்டு வாருங்கள் மாலை நிகழ்ச்சிகளுக்கு செல்லலாம் எனக் கேட்டுக்கொண்டும் அதனை திடமாக மறுத்த கனிமொழி ஊர் விட்டு ஊர் தொடர்ச்சியாக பயணித்திருக்கிறார். அப்போது ஆன் தி வேயில் ஒரு பேக்கரியை பார்த்த கனிமொழி சடாரென காரை நிறுத்தச் சொல்லி இறங்கி ஒரு டீ சொல்லுங்க என மிகவும் கேசுவலாக அமர்ந்திருக்கிறார்.

கனிமொழி ஆய்வு
ஒரு டீயை குடித்துவிட்டு, ஒரு கேக்கை சாப்பிட்டுவிட்டு அப்படியே மீண்டும் தனது ஆய்வுப் பணிகளை மாலையில் தொடர்ந்திருக்கிறார். பேக்கரியில் ஸ்நாக்ஸ் வாங்க வந்த பலரும் கனிமொழியா இது என வியந்ததோடு அவரிடம் தங்களை அறிமுகம் செய்துக் கொண்டு செல்ஃபி எடுத்துக்கொண்டனர். இன்று சட்டசபை நடைபெற்றதால் அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகிய இருவரும் சென்னையில் இருந்ததால் கனிமொழி நிகழ்ச்சிகளில் அவர்களால் பங்கேற்க முடியவில்லை.












Click it and Unblock the Notifications