மாநில உரிமைகளை பறிப்பதே மத்திய அரசின் குறிக்கோள்... கனிமொழி எம்.பி.குற்றச்சாட்டு
தூத்துக்குடி: மாநில அரசுகளின் உரிமைகளை பறிக்க வேண்டும் என்பதே மத்திய அரசின் குறிக்கோள் என திமுக மக்களவை உறுப்பினர் கனிமொழி குற்றஞ்சாட்டியிருக்கிறார்.
தூத்துக்குடி விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனைக் கூறினார். மேலும், ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் என்பது மாநிலங்களின் உரிமையை பறிக்கும் செயல் எனத் தெரிவித்துள்ளார்.

மத்திய பாஜக அரசு இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்த நாள் முதல் ஒட்டுமொத்த நாட்டையும் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர வேண்டும் என பிரதமர் மோடி நினைப்பதாகவும், அதற்கு எடுத்துக்காட்டே காஷ்மீர், முத்தலாக் உள்ளிட்ட விவகாரங்கள் எனவும் கனிமொழி கூறியுள்ளார்.
மேலும், இந்தியா என்பது பன்முக கலாச்சாரம் கொண்ட நாடு என்றும், அதனை ஒற்றை அடையாளத்திற்குள் சுருக்கி விட வேண்டும் என மோடி அரசு நினைப்பதாகவும் குற்றஞ்சாட்டினார். மத்திய அரசின் மக்கள் விரோத செயல்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து தனது எதிர்ப்பை பதிவு செய்து வருவதாகவும் தெரிவித்தார்.
முன்னதாக தூத்துக்குடி விமானநிலையம் வந்த கனிமொழியை மாவட்டச்செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான கீதா ஜீவன் வரவேற்று அழைத்துச்சென்றார். இதனிடையே திமுக மூத்த நிர்வாகி பரமால் பாண்டியன் உடல்நலமில்லாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதை அறிந்து அவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். மேலும், அவரது சிகிச்சைக்கு தேவையான உதவிகளையும் செய்வதாக உறுதியளித்தார்.
கனிமொழியின் நம்பிக்கை வார்த்தைகள் திமுக நிர்வாகி பரமால் பாண்டியன் குடும்பத்தினருக்கு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
-
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
விவசாயிகளுக்கு விழுந்த சர்ப்ரைஸ்.. வேளாண் நகைக்கடன் ரூ.40000-ல் இருந்து 2 லட்சமாக உயர்வு












Click it and Unblock the Notifications