இறந்த பெண்ணின் உடலில் 5 பவுன் நகை! துக்க வீட்டில் வாலிபர் செய்த அசிங்கம்! தூத்துக்குடியே ஆடிப்போச்சு
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பகுதியில் துக்க வீட்டுக்கு சென்ற இளைஞர் ஒருவர் மாலை அணிவிப்பது போல் பாவனை செய்து இறந்தவரின் உடலில் இருந்த 5.75 சவரன் நகையை நைசாக திருடிச்சென்ற சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அடக்கம் செய்யும் போது நகை காணாமல் போனது குறித்து குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி அந்த வாலிபரை கைது செய்துள்ளனர்.
துக்கம் நிறைந்து இருக்கும் இறந்த வீட்டில், வாலிபர் ஒருவர் 5 பவுன் நகையை திருடிய சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் இப்படியும் கூடவா செய்வார்கள் என நினைக்கும் அளவுக்கு நடைபெற்றுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெற்ற இந்த சம்பவம் குறித்த விவரம் வருமாறு:-

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் வண்டிக்கார தெருவைச் சேர்ந்தவர் முரசொலி மாறன். இவர் ஸ்ரீவைகுண்டம் அருகே பேட்மாநகரத்தில் உள்ள ஒரு கல்குவாரியில் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி மகேஸ்வரி. 30 வயதான இவருக்கு கடந்த சில நாட்களாக உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அங்குள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
எனினும், சிகிச்சை பலனளிக்காமல் கடந்த 12 ஆம் தேதி உயிரிழந்தார். சிறிய வயதிலேயே மகேஸ்வரி இறந்துவிட்டதால் மொத்த கிராமமே சோகத்தில் மூழ்கியிருந்தது. 13 ஆம் தேதி அவரது உடலுக்கு இறுதிச்சடங்கு நடத்தப்பட்டது. இதையடுத்து அவரது உடலில் அணிந்து இருந்த நகைகளை உறவினர்கள் கழற்ற தொடங்கினர். அப்போது, மகேஸ்வரி உடலில் கிடந்த 5.75 சவரன் நகை மாயமாகி இருந்தது தெரியவந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள், துக்க வீட்டுக்கு வந்த சிலரிடம் நகை காணவில்லை.. யாரும் பார்த்தீர்களா என்று விசாரித்தனர். ஆனால் யாரும் தெரியவில்லை என்று கூறிவிட்டனர். இதையடுத்து மகேஸ்வரி உடலுக்கு முரசொலி மாறன் மஞ்சள் கயிறால் தாலி கட்டினார். பின்னர் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. இதையடுத்து நகையை வீட்டின் பல்வேறு பகுதிகளிலும் தேடிப்பார்த்து கிடைக்காததால், இது தொடர்பாக போலீசில் புகார் அளித்தனர்.
அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டனர். அப்போது துக்க வீட்டுக்கு வந்த உறவினரான கொழுந்துவேல் என்பவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரிடம் விசாரித்ததில் உண்மையை ஒப்புக்கொண்டார். கொழுந்துவேல் தான் மாலை அணிவிக்கும் போது அப்படியே நைசாக நகையை திருடியுள்ளார். பின்னர் ஒன்றும் தெரியாதது போல் அங்கிருந்து கிளம்பியிருக்கிறார். இதையடுத்து கொழுந்துவேலை கைது செய்த போலீசார் அவரை ஸ்ரீவைகுண்டம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
-
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான் -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
130 தொகுதிகளில் வெற்றி! திமுகவை அலற விட்ட எம்ஜிஆர்.. 77க்குப் பின் 10 ஆண்டுகள் பறந்த அதிமுக கொடி! -
"போரில் புதின் என்ட்ரி".. ஈரான் உச்ச தலைவரை ராணுவ விமானத்தில் தூக்கி சென்ற ரஷ்யா? பரபரப்பு தகவல் -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
சிங்கம் களமிறங்கிடுச்சு.. காலை சிவி சண்முகம்.. மாலை திண்டுக்கல் சீனிவாசன்! வாயை விட்டதால் கண்டனம்! -
பழைய மீட்டர் போய் புது மீட்டர் வந்தாலே கரண்ட் பில் எகிறுகிறதா? EB வாரியம் சொல்லாத அந்த 1 ரகசியம் இதோ -
"விவாகரத்து + தேர்தல்".. சென்னையில் சொத்துகளை அவசரஅவசரமாக விற்கும் நடிகர் விஜய்..ஷாக் காரணங்கள் -
வாரத்தில் 4 நாள் தான் வேலை.. 3 நாள் லீவு! எரிபொருள் தட்டுப்பாட்டை கட்டுப்படுத்த இலங்கை அதிரடி முடிவு -
சூப்பர் ஸ்டார் ரஜினி சொன்ன 4 பேரை கவனிச்சீங்களா? விஜய்யை முளையிலேயே ஆஃப் செய்து? எங்கேயோ கேட்ட குரல் -
கூட்டணி சேர விடாமல் விஜய்யை தடுக்கும் "அந்த" 2 பேர்? பணத்திற்கு எங்க போறது? குமுறும் தவெகவினர் -
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல்












Click it and Unblock the Notifications