"ஊழல் செய்தவர்" செந்தில் பாலாஜியை பாஜகவில் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை..நாராயணன் திருப்பதி காட்டம்
தூத்துக்குடி: கண்டக்டர் வேலை, கிளீனர் வேலை வாங்கி கொடுப்பதாக கூறி சாதாரண மக்களிடம் ஊழல் செய்தவர் செந்தில் பாலாஜி.. அவரை பாஜகவில் சேர்க்க வேண்டிய தேவை இல்லை என்று பாஜகவின் நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.
"நீங்கள் ஏன் பாஜகவில் இணையக் கூடாது என செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத் துறை கேட்டது என்று மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் நீதிமன்றத்தில் வைத்த வாதம் அரசியல் ரீதியாகவும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், தூத்துக்குடியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி, சாதாரண மக்களிடம் ஊழல் செய்தவர் செந்தில் பாலாஜி.. அவரை பாஜகவில் சேர்க்க வேண்டிய தேவை இல்லை என்று கூறியுள்ளார்.

தூத்துக்குடியியில் செய்தியாளர்களை சந்தித்த நாராயணன் திருப்பதி கூறியதாவது:- "ஒரே நாடு ஒரே தேர்தல் 2024 ஆம் ஆண்டு வருவதற்கு வாய்ப்பு இல்லை. பல மாநிலங்களில் 3 மாதத்திற்கு வருவதால் வளர்ச்சி திட்டங்கள் பாதிக்கப்படுகிறது. ராணுவம் உள்ளிட்ட பலரின் பணிகள் பாதிக்கப்படுகிறது. எனவே 2029 ஆம் ஆண்டு ஒரே நாடு ஒரே தேர்தல் வருவதற்கு வாய்ப்பு உள்ளது.
பாஜகவில் செந்தில் பாலாஜி போன்றவர்களை சேர்க்க வேண்டிய அவசியம் கிடையாது. கண்டக்டர் வேலை, கிளீனர் வேலை வாங்கி கொடுப்பதாக கூறி சாதாரண மக்களிடம் செந்தில் பாலாஜி ஊழல் செய்தவர். செந்தில் பாலாஜி மின்சாரம் தயாரிக்க விண்ணப்பம் கொடுக்க வந்த ஒருவரிடம் 20 லட்ச ரூபாய் லஞ்சம் பெற்றவர். அவரை பாஜகவிற்கு வாங்க என அழைப்பது நம்பும் படியாகவா இருக்கிறது" என்றார்.
முன்னதாக, நேற்று முன் தினம் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீதான விசாரணை நடைபெற்றது. அப்போது செந்தில் பாலாஜி சார்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் ஆஜராகி வாதங்களை முன்வைத்தார். அப்போது, "செந்தில் பாலாஜி மீது கூறப்பட்டுள்ள சட்ட விரோத பண பரிமாற்ற குற்றச்சாட்டு 9 ஆண்டுகள் முன்பானது.
சட்ட விரோத பண பரிமாற்றம் நடந்ததற்கான எந்த ஆதாரங்களும் இல்லை. இந்த ஒன்பது ஆண்டுகளில் வருமான வரியை தாக்கல் செய்துள்ளார். சட்ட விரோதமாக பண பரிமாற்றம் செய்திருந்தால் வருமான வரி செலுத்தியது எப்படி ஏற்கப்பட்டிருக்கும்? வழக்கு பதியப்பட்ட ஆண்டிலிருந்து தற்போது வரை வருமான வரி செலுத்தியது வருமான வரித்துறையால் ஏற்கப்பட்டுள்ளது.
அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. நீங்கள் ஏன் பாஜகவில் இணையக்கூடாது என விசாரணையின் போது செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை கேட்டுள்ளது" என்று வாதத்தை முன்வைத்தார்.
-
சீனியர்களை கழற்றிவிடும் பாஜக? தமிழகத்தில் புதுமுகங்களை களமிறக்க திட்டம்.. பின்னணியில் 3 காரணம் -
50-ல் தொடங்கி 25-ல் மல்லுக்கட்டும் அதிமுக, பாஜக.. எடப்பாடி பழனிசாமி கறார் முடிவால் கூட்டணி விரிசல்? -
பாஜகவின் "பெரிய அசைன்மெண்ட்".. தடையாய் நிற்கும் சைலண்ட் கில்லாடி? விஜய்யின் இமேஜ் மேக்ஓவர் சிதையுமா? -
புதுச்சேரியில் 16 தொகுதிகளில் என்.ஆர்.காங்கிரஸ் போட்டி.. பாஜக + அதிமுக + லஜகவுக்கு 14 சீட்! -
ஆமா.. அதிமுக எதற்காக பாஜகவுக்கு இன்னும் சீட் ஒதுக்கவில்லை.. பின்னணியில் நடப்பது இதுதான்! -
பாஜக விஜய்க்கு விரித்த சிவப்பு கம்பளம்.. YES சொல்வாரா? ஷேர் ஆட்டோ பாலிட்டிக்ஸ் தமிழகத்தில் எடுபடுமா? -
பாஜக கூட்டணிக்கு விஜய் வருவாரா? டெல்லி தலைமை முடிவு செய்யும்.. நயினார் நாகேந்திரன் சூசக பதில்! -
விஜய் ஆசைக்கு ‘வேட்டு’ வைத்த ரங்கசாமி.. புதுச்சேரியில் தவெக உடன் கூட்டணி கிடையாது.. அதிரடி முடிவு! -
கள்ளக்குறிச்சியில் சினிமாவை மிஞ்சும் சம்பவம்.. காதல் கணவனுக்கு உயிருடன் கொள்ளி வைத்த அம்மு -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: 5 சவரன் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! எப்படி விண்ணப்பது












Click it and Unblock the Notifications