"காரை நோக்கி வந்த மர்ம கும்பல்".. என்னை கொல்ல சதி நடக்கிறது.. குண்டை தூக்கி போடும் கடம்பூர் ராஜூ!
கோவில்பட்டி: தன்னை கொல்ல சதி நடக்கிறது என்று கோவில்பட்டி தொகுதியில் போட்டியிடும் அதிமுக அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
கோவில்பட்டி தொகுதியில் அதிமுக வேட்பாளராக 3-வது முறையாக போட்டியிடும் அமைச்சர் கடம்பூர் ராஜூ தற்போது அங்கு தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகிறார். இரண்டு முறை இங்கு வெற்றிபெற்றவர் ஹாட் டிரிக் அடிக்கும் திட்டத்தில் தற்போது இருக்கிறார்.
இன்னொரு பக்கம் கடம்பூர் ராஜூவிற்கு எதிராக அமமுக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் களமிறங்கி உள்ளார். இங்கு இரண்டு முறை அதிமுக வெற்றிபெற்று இருந்தாலும் இது கம்யூனிஸ்ட் கட்சி வலுவாக இருக்கும் தொகுதியாகும்.

திமுக
இங்கு திமுக கூட்டணி சார்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சீனிவாசன் போட்டியிடுகிறார். இதனால் இவர்கள் மூவருக்கும் இடையில் கடுமையான போட்டி நிலவி வருகிறது. இந்த நிலையில் நேற்று கோவில்பட்டியில் கடம்பூர் ராஜூ பிரச்சாரம் முடித்துவிட்டு திரும்பும் போது அவரை சிலர் தாக்க முயன்றதாக தகவல்கள் வெளியாகின. கடம்பூர் ராஜூ காரை நோக்கி சிலர் வந்துள்ளனர்.

பட்டாசு
காரை பார்த்து தீபாவளி பட்டாசுகளை வீசி உள்ளனர். ஆனால் டிரைவர் சுதாரித்ததால் இந்த பட்டாசுகள் காரில் விழுந்து அசம்பாவிதம் எதுவும் ஏற்படவில்லை. இந்த நிலையில் தன்னை கொல்ல சதி நடக்கிறது என்று கடம்பூர் ராஜூ கூறி உள்ளார். இவர் அளித்த பேட்டியில் கோவில்பட்டியில் திமுக அதிமுக இடையில்தான் போட்டி. இங்கு வேறு யாருக்கும் மக்கள் ஆதரவு இல்லை.

அதிமுக
இங்கு இந்த முறை திமுகவும் போட்டியிடவில்லை. திமுக கூட்டணியின் சிபிஎம்தான் போட்டியிடுகிறது. அதனால் மீண்டும் இங்கு நான் வெற்றிபெறவே அதிக வாய்ப்புகள் உள்ளன. எனக்கு மக்கள் ஆதரவு உள்ளது. இந்த தொகுதிக்காக நான் நிறைய செய்து இருக்கிறேன்.

திட்டங்கள்
10 ஆண்டுகளில் நிறைய நலத்திட்டங்களை கொண்டு வந்து இருக்கிறேன். மக்களுக்காக உழைத்து இருக்கிறேன். மக்கள் எனக்குத்தான் வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. சிலருக்கு இப்போதே தோல்வி பயம் வந்துவிட்டது. இதனால் என்னை கொல்ல சதி நடக்கிறது. என் காரை தாக்க சிலர் முயற்சி செய்தனர்.

வெற்றி
நான் வெற்றிபெற்றுவிடுவேன் என்று உறுதியாகிவிட்டது. இதனால் தோல்விக்கு அஞ்சி என்னை கொல்ல திட்டங்களை வகுக்கிறார்கள். நான் இதை எல்லாம் பார்த்து அஞ்ச மாட்டேன், என்று கடம்பூர் ராஜூ கூறியுள்ளார் .
-
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன












Click it and Unblock the Notifications