கோவில்பட்டி ரயில் நிலையத்தில் இந்தியில் மட்டுமே பேசிய ஊழியர்.. பெரிய சம்பவம் செய்த பயணிகள்
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ரயில் நிலைய டிக்கெட் கவுண்டரில் டிக்கெட் தரும் ஊழியர் இந்தியில் மட்டுமே பேசியதால் பயணிகள் அவதி அடைந்தார்கள். இதனை அங்கிருந்த பயணிகள் சிலர் வீடியோ எடுத்த சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர்.இது பெரிய அளவில் பேசுபொருளாகி உள்ளது.
தமிழகத்தின் முக்கியமான ரயில்களின் பட்டியலை எடுத்தால் அதில் கோவில்பட்டி ரயில் நிலையம் நிச்சயம் இடம் பெறும். காரணம் தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர், தென்காசி ஆகிய 4 மாவட்டங்களை இணைக்கும் முக்கியமான இடமாக கோவில்பட்டி இருக்கிறது. தென்மாவட்ட ரயில்கள் பெரும்பாலும் கோவில்பட்டியில் நின்றுதான் செல்லும். வந்தே பாரத் உள்பட ஒரு சில ரயில்கள் மட்டுமே நிற்காது. தூத்துக்குடி மாவட்டத்தின் பெரிய ரயில் நிலையமாகவும், தூத்துக்குடி மக்கள் அதிகம் பயன்படுத்தும் ரயில் நிலையமாகவும் கோவில்பட்டி ரயில் நிலையம் இருக்கிறது.

பயணிகள் கட்டணத்தில் அதிகளவில் கோவில்பட்டி ரயில் நிலையம் 30 கோடி வருமானத்தினை ஈட்டி வருகிறது. ஏ கிரேட் ரயில் நிலையமான இவ்வாறு அதிகமாக மக்கள் வரும் ரயில் நிலையத்தில் முன்பதிவு செய்ய மற்றும் முன்பதிவு இல்லாத டிக்கெட் பெற ஒரு கவுண்டர் மட்டுமே பெரும்பாலும் செயல்பாட்டில் இருப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டி வருகிறார்கள். இது நீண்டகாலமாக உள்ள புகார்..
இது ஒருபுறம் எனில் நேற்று கோவில்பட்டி ரயில் நிலைய தட்கல் டிக்கெட் கவுண்டரில் இந்தியில் மட்டுமே டிக்கெட் தரும் ஊழியர் பேசியதால் பயணிகள் அவதி அடைந்தார்கள். வடமாநிலத்தினை சேர்ந்த பணியாளர் தட்கல் கவுண்டரில் இருந்திருக்கிறார்.. அவருக்கு தமிழ், ஆங்கிலம் எதுவும் தெரியவில்லை. ஹிந்தி மட்டும் தெரிந்து இருந்ததால் தட்கல் மூலமாக டிக்கெட் முன் பதிவு செய்யவந்தவர்கள் கூறிய விபரங்களை புரிந்து கொள்ள முடியமால் அந்த பணியாளர் பரிதவித்தார். ஹிந்தியில் பேசினால் மட்டும் தான் விரைந்து தன்னால் டிக்கெட் கொடுக்க முடியும், இல்லை என்றால் மெதுவாகவே டிக்கெட் தருவேன் என்று அவர் கூறினாராம். இதனால் தட்கலில் முன்பதிவு செய்ய வந்தவர்கள் பரிதவித்து போனார்கள்.
முன்பதிவு இல்லாத டிக்கெட் எடுக்க வந்தவர்களும் பெரும் சிரமம் அடைந்தனர். தட்கல் டிக்கெட் எடுக்க நீண்ட நேரம் தாமதனம் ஆனதால் ஆத்திரமடைந்த பயணிகள் அங்குள்ள ஊழியரிடம வாக்குவாதத்தில் ஈடுபட்டன. இது குறித்து தகவல் அறிந்து விரைந்து வந்த ரயில்வே நிலைய போலீசார் மற்றும் கிழக்கு காவல்நிலைய போலீசார் வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதுடன், இது குறித்து கோவில்பட்டி நிலைய மேலாளரிடம் புகார் கொடுங்கள் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் தெரிவித்தனர். இதையடுத்த பாதிக்கப்பட்டவர்கள் நிலைய மேலாளர் அலுவலகம் சென்று புகார் கொடுத்தனர். அப்போது அங்கும் பிரச்சனை ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து பயணி ஒருவர் ஆவேசத்துடன் கூறுகையில், தட்கல் கவுண்டரில் தமிழ்,ஆங்கிலம் தெரியாத நபரை பணியில் அமர்ந்திருக்கிறார்.. அவருக்கு இந்தி மட்டும் தான் தெரிகிறது.. இதுபற்றி புகார் அளித்து நாங்கள் உதவி பண்ணுங்க என்று கேட்கிறோம்... அவர்களோ தமிழ்நாட்டுக்காரன் தானே எப்படியும் போங்க என்ற நினைப்பில் இருக்கிறார்கள்.. எந்த வேலையும் தெரியாத ஒரு ஆளை தட்கல் கவுண்டரில் போட்டிருக்கிறார்கள் என்றார். இன்னொரு பெண் பயணி கூறுகையில், தட்கல் டிக்கெட் கேட்டு விண்ணப்பித்தால் அவருக்கு தமிழ் சுத்தமாக தெரியவில்லை... ஆங்கிலமும் தெரியவில்லை.. இந்தியில் பேச வேண்டும் என்று கேட்கிறார்.. எங்களுக்கு இந்தி தெரியாது.. எனவே அங்கு தமிழ் தெரிந்த பணியாளரை உள்ளே பணியில் அமர்த்த வேண்டும்
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரில் இதே நிலைமைதான் இருப்பதாக புகார் எழுந்துள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு கூட அன்ரிசர்வ் டிக்கெட் வழங்கும் இடத்தில் இருந்த நபருக்கு தமிழ் தெரியாததால் அங்கிருந்த மக்கள் டிக்கெட்டை எடுப்பதற்கு அதிகமான நேரம் ஆனதால் அந்தோதியா ரயில் ஐந்து நிமிடங்கள் கழித்து புறப்பட்டு சென்றது என பொதுமக்கள் தெரிவித்தனர்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications