இனி யாரையும் அடிக்க மாட்டேன்.. தலையை ஆட்டி க்யூட்டாக சொன்ன திருச்செந்தூர் தெய்வானை! டெய்லி வாக்கிங்!
தூத்துக்குடி: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் யானை தெய்வானை தாக்கி பாகன் உதயகுமார் அவரது உறவினர் சிசுபாலன் ஆகியோர் உயிரிழந்த சம்பவம் பக்தர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், இனி யாரையும் தாக்குவாயா? என்று வேடிக்கையாக பாகன் கேட்டதற்கு, மாட்டேன் என்பது போல் தலையை ஆட்டியது யானை தெய்வானை.
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தெய்வானை என்ற 26 வயது மதிக்கத்தக்க யானை பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த யானையை பாகன் உதயகுமார் என்பவர் பராமரித்து வருகிறார். இதற்காக ராஜகோபுரத்திற்கு அருகிலேயே சிறிய குடில் அமைக்கப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு யானை கொட்டகை அருகே நின்ற போது யானைக்கு பழம் கொடுக்க பாகன் உதயகுமார் சென்றார். அப்போது அவரது உறவினரும் முன்னாள் ராணுவ வீரருமான கன்னியாகுமரியை சேர்ந்த சிசுபாலன் என்பவர் சென்றுள்ளார். அப்போது திடீரென யானை அவர்களை மிதித்துக் தாக்கியது.
இதில் சிசுபாலன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் உதயகுமார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைக்கு பிறகு உயிர் இழந்தார். யானை மிதித்ததால் பாகன் உட்பட இருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் நீண்ட நேரம் யானைக்கு அருகே நின்றதாலும் அதனை தொட்டு செல்ஃபி எடுக்கு முயன்றதால் தன்னை வேறு யாரோ தொடுவதாக உணர்ந்து தெய்வானை பாகன் உதயகுமாரையும் சிசுபாலனையும் மிதித்துக் கொன்றதாக கூறப்படுகிறது.
இதனால் பக்தர்கள் அச்சமடைந்த நிலையில், யானையும் சோகத்தில் மூழ்கியதோடு, உணவு எடுத்துக் கொள்ளாமல் தவித்தது. தொடர்ந்து யானைக்கு சிகிச்சை அளித்து வருவதாக வனத்துறை அதிகாரிகள் கூறியிருந்தனர். இந்த நிலையில் யானை கடந்த சில நாட்களுக்கு முன்பு இயல்பு நிலைக்கு திரும்பியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து, வனத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அலுவலர்கள் யானையை கண்காணித்து வந்தனர்.

மேலும் யானையின் பாகன்களான ராதாகிருஷ்ணன், செந்தில்குமார் ஆகியோர் யானையை தினமும் குளிக்கச் செய்து உணவு வழங்கி பராமரித்து வந்தனர். தொடர்ந்து யானைக்கு அருகே பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். தொடர் சிகிச்சை மற்றும் கண்காணிப்பு காரணமாக யானை தெய்வானை இயல்பு நிலைக்கு திரும்பியது.
இதற்கிடையில் கடந்த வாரத்தில் இருந்து யானை சாதாரண நிலையில் உள்ளதாக மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து யானை தினமும் கட்டப்பட்டுள்ள இடத்திலேயே குளிக்க வைக்கப்பட்டு யானை பாகன் மூலம் பராமரிக்கப்பட்டு வந்தது. அவ்வப்போது வனத்துறை மற்றும் கால்நடை மருத்துவர்கள் பார்த்து ஆய்வு செய்து விட்டு சென்றனர்.
இந்த நிலையில் இன்றைய தினம் மீண்டும் வனத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை மருத்துவர்கள் யானையை ஆய்வு மேற்கொள்ள வருகை தந்தனர். வன கால்நடை மருத்துவர் மனோகரன், ஆறுமுகநேரி கால்நடை உதவி மருத்துவர் அருண்குமார், வன கால்நடை ஆய்வாளர் அர்னால்ட், வனவர் ரகு ஆகியோர் யானையை நேரில் பார்த்து ஆய்வு செய்தனர். அப்போது யானைக்கு அவர்கள் பழங்கள் கொடுத்தனர். அதை வாங்கி சாப்பிட்ட யானை உற்சாகமானது.
இதற்கிடையில் இனி யாரையும் தாக்குவாயா? என்று வேடிக்கையாக பாகன் கேட்டதற்கு மாட்டேன் என்பது போல் தலையை ஆட்டியது. யானையை ஆய்வு செய்த வனத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை மருத்துவர்கள் யானை சகஜ நிலையில் தான் உள்ளது. எனவே யானையை எப்போதும் போல் தினமும் நடைபயிற்சிக்கு அழைத்துச் செல்லலாம் என பரிந்துரை செய்தனர். முதற்கட்டமாக பக்தர்கள் குறைவாக உள்ள சமயங்களில் நடைபயிற்சிக்கு அழைத்துச் செல்வது நலம் என்று கூறினர்.
அதைத் தொடர்ந்து யானை தினமும் குளிக்கும் சரவண பொய்கை பகுதியில் யானையை பராமரிக்க குடில் எதுவும் அமைக்கவில்லை. குளியல் தொட்டி கட்டப்பட்டுள்ள இந்த சரவண பொய்கை உள்ள பகுதி மிகவும் விஸ்தாரமான பகுதியாகும். எனவே அந்த இடத்தில் யானை பராமரிக்க ஒரு குடில் அமைத்தால் யானை இயற்கை சூழலில் இருக்க மிகவும் வாய்ப்பாக இருக்கும் என்று மருத்துவர்கள் தரப்பில் பரிந்துரை செய்துள்ளனர்.
-
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
பிரபல துணை நடிகை தீபாவின் தந்தைக்கு அரிவாள் வெட்டு.. டீக்கடையில் பயங்கரம்! என்ன நடந்தது? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications