தூத்துக்குடி காட்டில் பிளஸ் 2 மாணவியுடன் வந்த காதலன்! பின்னாடியே வந்த 2 நண்பர்கள்! நடந்தது என்ன?

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே பிளஸ் 2 மாணவியை பைக்கில் அழைத்துச் சென்ற காதலன், அவரது நண்பர்களுக்கு விருந்தாக்க முயன்ற அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்தேறியுள்ளது. இதுகுறித்து புகாரின் பேரில் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே ஆத்திக்காடு கோயில் தெருவைச் சேர்ந்தவர் அருள்ராஜ். இவரது மகன் சஞ்சய் (20). இவர் பெயிண்டராக உள்ளார்.

tuticorin pocso

இவர் பிளஸ் 2 படிக்கும் மாணவியை காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறி அவருடன் பழகி வந்தாராம். இதை நம்பிய அந்த மாணவியும் அவருடன் பழகியதாக சொல்லப்படுகிறது.

சம்பவம் நடந்த தினத்தன்று, சஞ்சய், மோட்டார் சைக்கிளில் பிளஸ் 2 மாணவியை அழைத்துக் கொண்டு ஆத்திக்காடு கருமேனியில் உள்ள ஆற்றங்கரைக்குச் சென்றனர். மேலும் அங்குள்ள காட்டுப் பகுதிக்கும் அழைத்துச் சென்றாராம்.

பின்னர் தனது நண்பர்களான நாசரேத் அருகே கச்சனாவிளை முருகன் கோயில் தெருவைச் சேர்ந்த திருமணியின் மகந் உபேஷ் தர்மா (21), உடன்குடி முத்துநகரைச் சேர்ந்த சக்திவேலின் மகன் முத்தரசன் (18) ஆகியோரை செல்போனில் தொடர்பு கொண்டு அந்த காட்டுப் பகுதிக்கு வந்துவிடுமாறு அவைத்தாராம்.

இது அந்த மாணவிக்கு தெரியாது. இந்த நிலையில் சஞ்சய் அழைத்தபடியே சிறிது நேரத்தில் உபேஷும், முத்தரசனும் பைக்கில் அங்கு வந்தனர். காட்டுப் பகுதி என்பதால் நண்பர்களை பாதுகாப்புக்காக அழைத்து வந்திருக்கிறார் என அந்த மாணவி நினைத்தாராம்.

இந்த நிலையில் காட்டுப் பகுதியில் 3 இளைஞர்களுடன் மாணவி இருப்பதை அப்பகுதி மக்கள் பார்த்து அவர்களிடம் விசாரித்தனர். அப்போதுதான் அந்த நபர் காட்டுப் பகுதிக்கு வந்ததே அந்த மாணவியுடன் உல்லாசமாக இருப்பதற்காகவும், அந்த மாணவியை நண்பர்களுக்கும் விருந்தாக்க முயன்றதும் தெரியவந்தது.

இதையடுத்து மெஞ்ஞானபுரம் காவல் நிலையத்தில் அந்த மாணவியையும் 3 இளைஞர்களையும் பொதுமக்கள் ஒப்படைத்தனர். இதையடுத்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இந்த தகவலை அறிந்த மாணவியின் பெற்றோர் சாத்தான்குளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து சஞ்சய், உபேஷ், முத்தரசன் ஆகிய 3 பேர் மீது போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவர்களை கைது செய்து பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர். மேலும் மாணவிக்கும் புத்திமதி சொல்லி பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.

தங்கள் மகளின் வாழ்க்கையை காப்பாற்றிய ஊர்மக்களுக்கு பெற்றோர் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர். பிளஸ் 2 மாணவியை காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்று நண்பர்களுக்கு விருந்தாக்க முயன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+