வைகாசி விசாகம் திருவிழா.. திருச்செந்தூர் உட்பட முருகன் திருத்தலங்களில் குவிந்த பக்தர்கள்!
திருச்செந்தூர்: வைகாசி விசாகம் இன்று கொண்டாடப்படுவதையொட்டி, திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் உள்ளிட்ட தமிழகத்திலுள்ள முருகன் திருத்தலங்களில் சுவாமி தரிசனத்திற்காக, பக்தர்கள் குவிந்துள்ளனர்.
முருகப்பெருமானின் அவதார நாளாக, வைகாசி விசாகம் கொண்டாடப்படுகிறது. திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, பழமுதிர்ச்சோலை உள்ளிட்ட முருகப்பெருமானின் அறுபடை வீடுகளிலும், வைகாசி விசாக திருவிழா 10 நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்படுவது வழக்கம்.

இன்று விசாக திருநாளின், நிறைவு நாள் ஆகும். இதையொட்டி திருச்செந்தூரில் இன்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் அதிகாலை 1 மணிக்கே, நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள், ஆராதனைகள் நடைபெற்று வருகின்றன.
தமிழகம் மட்டுமின்றி, பிற மாநிலங்கள், பிற நாடுகளில் இருந்தும் திருச்செந்தூர் கோவிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து முருகப்பெருமானை தரிசனம் செய்து வருகின்றனர்.

பக்தர்கள் பால்குடம் எடுத்தும், காவடிகள் எடுத்தும், முருகனுக்கு சிறப்பு வழிபாடுகளை செய்து வருகின்றனர். வைகாசி விசாகத் திருவிழாவையொட்டி திருச்செந்தூர் நகரமே விழாக் கோலம் பூண்டுள்ளது.
பிற முருகன் திருத்தலங்களை காட்டிலும், திருச்செந்தூரில் வைகாசி விசாக திருவிழா மிகவும் விமரிசையாக கொண்டாடப்படும். திருவிழாவின் நிறைவு நாளான இன்று முக்கிய நிகழ்வாக, முனி குமாரர்களுக்கு சாப விமோசனம் அளிக்கிறார் சுப்பிரமணியர்.
இதையடுத்து மகா தீபாராதனை நடை பெற்ற பிறகு, நிறைவு நிகழ்வாக, ஜெயந்திநாதர் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.
இதையொட்டி தூத்துக்குடி மாவட்டம் முழுமைக்கும் இன்று உள்ளூர் விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று திருத்தணி மற்றும் அறுபடை வீடுகளில் வைகாசி விசாகம் விழா கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications