கனிமொழி இல்லத்தில் பறிமுதல் செய்யப்பட்டது என்ன? வருமான வரித்துறை விளக்கம்
Recommended Video
தூத்துக்குடி: தூத்துக்குடியில் திமுக வேட்பாளர் கனிமொழி இல்லத்தில் நடத்தப்பட்ட வருமான வரி சோதனையில் பறிமுதல் செய்யப்பட்டது என்ன என்பது தொடர்பான தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
தூத்துக்குடி லோக்சபா தொகுதியில், திமுக சார்பில் அக்கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான கனிமொழி போட்டியிடுகிறார்.

இவரை எதிர்த்து பாஜக சார்பில், அக்கட்சியின் தமிழகத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிடுகிறார். போட்டி பலமாக உள்ள நிலையில், ஒரு ஓட்டுக்கு ஆயிரம் ரூபாய் அளவிற்கு பணம் பட்டுவாடா நடப்பதாக புகார்கள் வந்தன.
இந்த நிலையில்தான், நேற்று கனிமொழி தங்கியிருந்த குறிஞ்சி நகர் பகுதியில் உள்ள இல்லத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். சோதனை நடைபெறும் போது, உள்ளே யாரையும் அனுமதிக்கவில்லை. உள்ளே இருந்து வெளியேயும் யாரையும் அனுமதிக்கவில்லை.
இந்த சோதனை கடும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், ஒரு மணி நேர சோதனைக்கு பிறகு, கனிமொழி இல்லத்திலிருந்து பணமோ, பொருளோ கைப்பற்ற முடியவில்லை, என்று வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, வருமானவரித்துறையினர் வெறுங்கையோடு திரும்பி உள்ளனர். தங்களுக்கு கிடைத்த தகவல் தவறானது என்று வருமான வரித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த வருமானவரித்துறை சோதனை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications