வேலூருக்கு வந்த பிரபாகரன்.. விறுவிறுன்னு வீட்டிற்குள் போனால் ஏராளமான தங்கம்.. இறுதியில் ட்விஸ்ட்
வேலூர்: வேலூர் கொசப்பேட்டை திருமலை தெருவை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் வேலூரில் தனியார் காப்பீட்டு நிறுவன மேலாளர் ஆக பணியாற்றி வருகிறார். கடந்த நவம்பர் 15ம் தேதி இவரது வீட்டின் பூட்டை உடைத்த மர்ம நபர், வீட்டில் பீரோவில் இருந்த 25 சவரன் தங்க நகை மற்றும் வெள்ளி பொருட்கள் மற்றும் லட்சக்கணக்கில் பணத்தை திருடி சென்றுவிட்டார். இதுபற்றி சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் விசாரித்த போலீசார், பிரபாகரன் என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 28 பவுன் நகை, வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
சில திருடர்கள் பூட்டியிருக்கும் வீட்டை குறி வைத்து பணம், தங்க நகைகளை திருடுவதற்கு உடனடியாக திட்டமிடுவார்கள்.. திருடுவதில் கைதேர்ந்தவர்கள் உடனே பூட்டை உடைத்து தங்க நகை, பணம் மற்றும் விலை உயர்ந்த பொருட்களை திருடி சென்றுவிடுவார்கள்.. அப்படித்தான் ஒரு சம்பவம் வேலூரில் நடந்துள்ளது.

வேலூர் கொசப்பேட்டை திருமலை தெருவில் 56 வயதாகும் பாலகிருஷ்ணன் என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் வேலூர் அண்ணாசாலையில் உள்ள தனியார் காப்பீட்டு நிறுவனத்தில் மேனேஜராக பணிபுரிந்து வருகிறார். கடந்த நவம்பர் 15-ந் தேதி தனியார் காப்பீட்டு நிறுவனத்தில் பணிக்கு சென்ற பாலகிருஷ்ணன் பிற்பகலில் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது.
வீட்டின் பீரோவில் இருந்த 25 பவுன் நகை, வெள்ளி பொருட்கள், ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மர்மநபர் திருடிச் சென்றிருந்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பாலகிருஷ்ணன், உடனே வேலூர் தெற்கு போலீசில் புகார் அளித்தார். இதையடுத்து வேலூர் தெற்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் காண்டீபன் தலைமையிலான போலீசார் வழக்குப்பதிவு செய்து, கண்காணிப்பு கேமரா காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்தினார்கள்.
வெறும் இரண்டு நாளில் பாலகிருஷ்ணன் வீட்டில் திருடியவரை போலீசார் கண்டுபிடித்தனர். அந்த நபர் வேலூர் கோட்டை சுற்றுச்சாலை பகுதியில் திரிந்து கொண்டிருந்தார். அவரை போலீசார் பிடித்து தீவிரமாக விசாரணை நடத்தினர். அதில் அவர் தூத்துக்குடி மாவட்டம், வன்னியகாடு பகுதியில் உள்ள தளவாய்புரத்தை சேர்ந்த 42 வயதாகும் பிரபாகரன் என்பது தெரியவந்தது.
போலீசார் நடத்திய விசாரணையில், பிரபாகரன் நாடோடியாக ஒவ்வொரு மாவட்டமாக செல்வது வழக்கமாக வைத்திருப்பாராம். அப்படி அவர் ஆங்காங்கே செல்லும்போது அங்கு ஏதாவது ஒரு திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளாராம். அப்படித்தான் வேலூர் கொசப்பேட்டையில் பாலகிருஷ்ணன் வீட்டில் திருடியதையும் ஒப்புக்கொண்டார். இதனையடுத்து பிரபாகரனை போலீசார் கைது செய்தனர்.
அவரிடமிருந்து 28 பவுன் நகைகள், ½ கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.23 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தார்கள். கைதான அவர் மீது திண்டுக்கல், திருச்சி, மதுரை என பல்வேறு மாவட்டங்களில் குற்ற வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. , வேலூர், திருவண்ணாமலை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களிலும் பிரபாகரன் திருடி வந்துள்ளதும் தெரியவந்துள்ளது. அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
-
கன்னியாகுமரியில் 45 சவரன் தங்கம்.. கப்பல் என்ஜினியர் வீட்டில் திருடன் கொடுத்த ஒற்றை க்ளூ -
தயவு செஞ்சு குறைஞ்சுடாத தங்கமே.. மீண்டும் திருப்பி வைக்க முடியாது.. தங்கம் விலை சரிவால் ட்விஸ்ட் -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
20% வரை சரிந்த தங்கம் விலை! ஆனாலும் இந்தியாவுக்கு முழு பலன் கிடைக்காது! நிபுணர்கள் சொல்லும் விளக்கம் -
படக்குனு 10 கிராம் வாங்கிப் போடுங்க மக்களே! சட்டுனு சரிந்த தங்கத்தின் விலை.. இன்னும் சரியப் போகுதாம் -
SGB தங்கப் பத்திரம் வைத்திருப்பவரா நீங்க? லாபத்தில் கைவைக்கும் புதிய வரி விதிப்பு.. இதோ முழு விபரம் -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா?












Click it and Unblock the Notifications